வெள்ளி, 2 செப்டம்பர், 2022

கருப்பைவாய் புற்றுநோய் எதனால்?

 உங்கள் வீட்டுப் பெண்களுக்கான பதிவு

 

கருப்பைவாய் புற்றுநோய் எதனால்?

-------------------------

கருப்பைவாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்காக உள்நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள செர்வாவேக் தடுப்பூசி சில மாதங்களில் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்க உள்ளதாக ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு ஏற்படுகின்ற கருப்பைவாய் புற்றுநோய்க்கு என்ன காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? யாரேனும் மருத்துவர் உங்களுக்குச் சொல்லியுள்ளாரா? கடந்த பத்தாண்டுகளாகத்தான் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப் புற்றுநோயால் ஆண்டுதோறும் 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகத் தகவல் தெரிவிக்கிறது.

நீண்ட ஆய்வுக்குப் பின், பெண்கள் தம் மாதாந்திர உதிரப்போக்கின்போது பயன்படுத்தக்கூடிய நாப்கின்களால்தான் இப்புற்றுநோய் அவர்களுக்கு ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர். அத்தோடு வெள்ளைப்படுதல் எனும் நோயும் இதனால் ஏற்படுகிறது. எனவே கருப்பைவாய் புற்றுநோய் அறவே வராமல் தடுக்க வேண்டுமெனில் மாதாந்திர உதிரப்போக்கின்போது நாப்கின்களுக்கு மாற்றாகப் பருத்தித் துணிகளையே பயன்படுத்த வேண்டும்.

பெண்கள் பலர் வேலைக்குச் செல்வதாலும் அவ்வப்போது மாற்ற வேண்டிய தேவை ஏற்படும் என்பதாலும் பயன்படுத்த எளிதாக உள்ள நாப்கின்களையே தேர்வு செய்கின்றார்கள்; அவ்வப்போது துணியை மாற்றிக்கொள்வதைச் சங்கடமாக உணர்கின்றார்கள். ஆனால் நாளடைவில் அதனால் உடல் பாதிக்கப்படுகின்றபோது அது எதனால் ஏற்பட்டது; எதனால் புற்றுநோய் உண்டானது என்பதை அறியாமலேயே இறந்துபோய்விடுகின்றார்கள்.

மனசாட்சியுள்ள மருத்துவர்கள் நினைத்திருந்தால் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அத்தகைய மருத்துவர்கள் மிக மிக அரிதாகத்தானே இருக்கின்றார்கள்.  அவர்கள் வெளிப்படையாக எடுத்துச் சொன்னாலும், அவர்களுடைய செய்திகளெல்லாம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல் பரவாமல், காணாமல்போய்விடும். விளம்பர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களுக்கு எதையுமே ஒரு நடிகரோ ஒரு நடிகையோ திரையில் தோன்றி சொன்னால்தான் நம்புவார்கள்.

கார்ப்பரேட் கம்பெனி முதலாளிகள் முதலில் ஒரு பொருளை மக்களுக்கு அறிமுகப்படுத்தி விற்பனை செய்து பணத்தை அள்ளுவார்கள். பிறகு அதனால் ஏற்படும் தொல்லைகளுக்கும் நோய்களுக்கும் மருந்தைக் கண்டுபிடித்து, அதையும் விற்றுப் பணத்தை அள்ளுவார்கள். அந்த வகையில் நாப்கின்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை அள்ளியவர்கள், இப்போது அதனால் ஏற்படும் நோய்க்கான மருந்தைக் கண்டறிந்து அதை விற்றுப் பணத்தை அள்ள இருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் எதை அறிமுகப்படுத்தினாலும் பணத்தை அள்ளுவதே அவர்களின் நோக்கமாகும். நாம்தாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்; எது நமக்கு நல்லது என்பதை உய்த்துணர்ந்து பயன்படுத்த வேண்டும்.

தற்போது வரவிருக்கிற தடுப்பூசியின் விலை ரூ. 200 முதல் 400 வரை இருக்கலாம் என்று சொல்கிறார்கள். மிகக் குறைந்த விலைதான். ஆனால் இதன்மூலம் புற்றுநோய் அறவே வராமல் தடுக்க முடியுமா? இனி அறவே வராது என்று உறுதியாகக் கூற முடியுமா?

அதற்குப் பதிலாக நம் பெண்கள் சிரமம் பாராமல் இயற்கைக்கு மாறினால் எந்தத் தொல்லையுமின்றி நிம்மதியாக வாழலாம். பல்வேறு கம்பெனிகள் விற்பனை செய்கிற இரசாயன நாப்கின்களைப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பருத்தித் துணியையே பயன்படுத்தட்டும். அல்லது தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள பருத்தித் துணியால் செய்யப்பட்ட நாப்கின்கள் (Cotton Cloth Sanitary Napkins), இரசாயனக் கலப்பற்ற மூலிகை நாப்கின்கள் (Organic napkins) ஆகியவற்றைப் பயன்படுத்தட்டும்.

எல்லோரும் இயற்கையோடு ஒன்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே எமது எண்ணம்.

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

02 09 2022

04 02 1444

கூடுதல் தகவலுக்கு இங்கே சொடுக்குக:




கருத்துகள் இல்லை: