ஞாயிறு, 20 டிசம்பர், 2009

கொள்கை தொடர்பான முக்கிய எச்சரிக்கைகள்







சனி, 19 டிசம்பர், 2009

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு


இஸ்லாமியப் புத்தாண்டு

ஒவ்வொரு சமயத்தாரும் ஆண்டின் தொடக்கத்தைக் குறிப்பதற்கு தமக்கென ஒரு கணக்கு வைத்துள்ளனர். அந்த வகையில் முஸ்லிம்களும் தமக்கென ஒரு கணக்கு வைத்துள்ளனர். அது ஹிஜ்ரீ ஆண்டாகும்.

முஹம்மது (ஸல்) அவர்கள் தம் தாயகத்தைத் துறந்து மதீனா நகரம் சென்றார்கள். அந்தப் பயணம் 'ஹிஜ்ரத்' என்று அழைக்கப்படுகிறது. நபியவர்கள் தம் தாயகத்தைத் துறந்து மதீனா சென்றடைந்த நாளிலிருந்து இக்கணக்கு தொடங்குவதால் இது 'ஹிஜ்ரீ' ஆண்டு எனப்படுகிறது.

ஆனால், இதற்குப் பதினேழு ஆண்டுகளுக்குப்பின் இரண்டாம் கலீஃபா உமர் (ரழி) அவர்கள் தம் ஆட்சிக் காலத்தின்போது நபியவர்கள் மதீனா வந்து சேர்ந்த இரபீஉல் அவ்வல் மாதத்திலிருந்து ஹிஜ்ரீ ஆண்டு கணக்கிடப்படாது. மாறாக, முஹர்ரம் மாதத்திலிருந்துதான் கணக்கிடப்பட வேண்டும் என்று ஒழுங்கு செய்தார்கள். அந்த முறைப்படியே தற்போது ஹிஜ்ரீ ஆண்டு கணக்கிடப்படுகின்றது. இதன் அடிப்படையில் இஸ்லாமிய ஆண்டு முஹர்ரம் மாதத்தில் தொடங்கி துல்ஹஜ்ஜு மாதத்தில் நிறைவடைகிறது.

இந்தியாவில் இன்று (19-12-2009) இஸ்லாமிய ஆண்டின் 1431ஆம் ஆண்டு தொடங்குகின்றது. விண்ணையும் மண்ணையும் படைத்தபோதே ஓர் ஆண்டுக்கு பன்னிரண்டு மாதங்கள் என அல்லாஹ் நிர்ணயித்துவிட்டான்.


அது பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்: "வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல்-அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளவாறு அல்லாஹ்விடம் திண்ணமாக மாதங்களின் எண்ணிக்கையானது (ஓராண்டுக்குப்) பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றுள் நான்கு (துல்கஅதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம் மற்றும் ரஜப்) மாதங்கள் கண்ணியமானவையாகும்." (09: 36)

இந்த வசனத்தில், 'அவற்றுள் நான்கு மாதங்கள் கண்ணியமானவை' என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், அக்காலத்தில் அரபியர்கள் தொடர்ந்து தங்களுக்குள் போர் செய்துகொண்டிருந்தனர். எனவே, அவர்கள் அதை நிறுத்தி அந்நான்கு மாதங்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இறைவன் அவ்வாறு கூறியுள்ளான்.

ஹிஜ்ரீ ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம். இதில் உள்ள பத்தாம் நாள் 'ஆஷூரா' என அழைக்கப்படுகிறது. இந்நாளில் மகிழ்ச்சியான மற்றும் சோகமான பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக இஸ்லாமிய வரலாறு கூறுகின்றது. அதன் அடிப்படையில், இந்நாள் முஸ்லிம்களிடம் ஒரு புனித நாளாகக் கருதப்படுகிறது.

நபியவர்கள் மதீனா வந்து சேர்ந்த சமயத்தில் அங்கிருந்த மக்களின் நிலையைக் கண்டார்கள். அவர்களுள் யூதர்கள் 'ஆஷூரா' நாளில் நோன்பு நோற்பதைக் கண்டு, "நீங்கள் நோன்பு நோற்கின்ற இந்த நாளின் சிறப்பென்ன?" என்று அவர்களிடம் வினவினார்கள். "இது ஒரு மகத்தான நாள். இதில்தான் இறைவன் மூசா நபியையும் அவருடைய சமுதாயத்தையும் காப்பாற்றி ஃபிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே, அதற்காக மூசா நபி தம் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அந்நாளில் நோன்பு நோற்றார். ஆக வே, நாங்கள் அந்நாளில் நோன்பு நோற்கின்றோம்" என்று விடையளித்தார்கள்.

இதனைக் கேட்ட நபியவர்கள் மூசாவைப் பின்பற்றுவதற்கு உங்களைவிட நாங்களே மிகத் தகுதியானவர்கள் என்று கூறியதோடு அந்நாளில் தாமும் நோன்பு நோற்றார்கள். தம் தோழர்களையும் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டார்கள். (நூற்கள்: புகாரீ, முஸ்லிம்)

மேலும், நபியவர்கள் கூறினார்கள்: "ஆஷூரா நாளில் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். அதில் யூதர்களுக்கு மாறுசெய்யுங்கள். எனவே, அந்நாளுக்கு முன்போ பின்போ ஒரு நாள் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள்." (நூல்: அஹ்மது)

ஆஷூரா நாளின் சிறப்புக்குக் காரணம், நான்காம் கலீஃபா அலீ (ரழி) அவர்களின் மகன் ஹுசைன் (ரழி) அவர்கள் கர்பலா போர்க்களத்தில் கொல்லப்பட்டதுதான் என்று சிலர் கூறுவர். இது தவறாகும். ஏனெனில், இதன் சிறப்பு அவர்கள் பிறப்பதற்கு முன்பிருந்தே இருக்கின்றது. ஆனால், ஹுசைன் (ரழி) அவர்களின் வீரமரணத்திற்கு, சிறப்புக்குரிய இந்த நாளை இறைவன் தேர்ந்தெடுத்தான் என்பதுதான் உண்மை.

மேலும், இந்த நாளைத் துக்க நாளாகக் கருதுவது, இம்மாதத்தில் பத்து நாட்கள் வரை கருப்பு ஆடைகள் அணிவது, தமக்குத்தாமே உடலைக் கீறிக் கிழித்துக்கொண்டு இரத்தம் சிந்துவது, தீ மிதிப்பது போன்றவை இஸ்லாமிற்கு முரணான செயல்களாகும். இஸ்லாமிய மார்க்கத்தையும் அதன் வரலாற்றையும் சரியாக விளங்காதவர்கள்தாம் இவ்வாறு செய்துகொண்டிருப்பார்கள்.

எனவே, அறிவுக்குப் பொருந்தாத செயல்களைவிட்டு நீங்கி, முஹம்மது நபியவர்கள் நமக்குக் காட்டித் தந்த வழிகாட்டுதல்களின்படி இப்புத்தாண்டு முதல் நம் வாழ்வை அமைத்துக்கொள்ள முனைவோம். மேலும், நாம் நம்முடைய பிறப்பு, திருமணம், இறப்பு மற்றும் அன்றாட வாழ்வில் ஹிஜ்ரீ தேதியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் இஸ்லாமிய வரலாற்றை எளிதாக விளங்கிக்கொள்ளலாம். அத்தோடு பிறை சார்ந்த குழப்பமும் நீங்கிவிடும்.

நம்முடைய இம்மையும் மறுமையும் சிறப்பாக அமைய அல்லாஹ் அருள்புரிவானாக!

அனைவருக்கும் என் இதயங்கனிந்த இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

செவ்வாய், 15 டிசம்பர், 2009

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்

அல்லாஹ்விற்குத்  தொண்ணூற்று ஒன்பது -நூற்றுக்கு ஒன்று குறைவான - பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றையையே அவன் விரும்புகிறான்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ: 6410, அபூஹுரைரா  (ரளி)

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள்  உள்ளன. அவற்றால் அவனை அழையுங்கள். (7:180)

அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன அல்லாஹ்வை நினைவு கூர்வதால்தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (13:28)

திங்கள், 14 டிசம்பர், 2009

சனி, 12 டிசம்பர், 2009

என்றுதான் அகலுமோ அறியாமை?


வெள்ளி, 11 டிசம்பர், 2009

வெள்ளி, 27 நவம்பர், 2009

தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்


அனைவருக்கும் என்னுடைய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி

 

வியாழன், 19 நவம்பர், 2009

தியாகம் செய்வோம்


தொடர் 2


தொடர் 3


தொடர் 4


புதன், 18 நவம்பர், 2009

பொதுத்தொண்டுகள்


தொடர் 2


தொடர் 3


தொடர் 4


செவ்வாய், 17 நவம்பர், 2009

Five Kalimaa



ஆண்கள் சுய உதவிக் குழு

வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறவர்கள் 
ஒன்றிணைந்து தமக்குத் தெரிந்த 
ஏதேனும் ஒரு தொழிலைத் தொடங்கினால் 
அதுவே அவர்களின் எதிர்காலத்தை 
நிர்ணயிக்கின்ற அடிப்படைத் தூணாக அமையும்.


-சமநிலைச் சமுதாயம் ஏப்ரல் 2005

முனைவர் பட்டம் பெற வாழ்த்துவீர்!


திங்கள், 16 நவம்பர், 2009

இறைவனின் பார்வையில்...


வெள்ளி, 13 நவம்பர், 2009

இரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்



சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன. இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும் விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தாவரங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு முறையாகும். இருப்பினும் அமெரிக்காவில் வாழும் ஒருவகைக் கிளியினம் இதுபோன்ற விஷமுள்ள விதைகளை உணவாக உட்கொள்கிறது. இது மிகவும் வியப்புக்குரிய செயலாகும். ஏனெனில், தாவரங்களை உணவாக உட்கொள்ளும் மற்ற விலங்கினங்கள் இந்த செடியின் பக்கம் தலைகாட்டவே பயப்படும்போது, இந்தப் பறவையினம் மட்டும் தொடர்ந்து விஷமுள்ள இந்த விதைகளை உணவாக உட்கொண்டும் எந்த விதப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.
ஆங்கிலத்தில் 'மகாவ்' (MACAW) என அழைக்கப்படுகின்ற இந்தக் கிளியினம், விஷ  விதைகளை உணவாக உட்கொண்டாலும் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லையே, எப்படி? என்கிற கேள்வி, விஞ்ஞானிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இந்தக் கிளியினத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது அவற்றிடம் உள்ள முற்றிலும் வித்தியாசமான நடத்தையை அறிய முடிந்தது.
அவை உணவாக உட்கொள்ளக்கூடிய, ஆனால் விஷத்தன்மையுள்ள இந்த விதைகளை உட்கொண்டதும், இந்தக் கிளிகள் பாறை போன்ற ஓர் இடத்திற்குப் பறந்து செல்கின்றன. அங்குள்ள பாறைகளைக் கொஞ்சம், கொஞ்சமாக அரித்து, களிமண் தன்மை கொண்ட பாறைகளை விழுங்குகின்றன. இவ்வாறு களிமண் தன்மை கொண்ட பாறைகளைக் கிளிகள் விழுங்கும்  இச்செயல், எந்தவித நோக்கமும் இன்றி செய்யக்கூடிய செயல் அல்ல. உண்மையிலேயே, அவை விழுங்கக் கூடிய களிமண் தன்மை கொண்ட பாறைகள், அவை  உணவாக உட்கொண்ட விதையில் உள்ள விஷத்தன்மையை முறித்து விடுகின்றன. எனவேதான், இந்தப் பறவையினம் விஷத்தன்மை உள்ள விதைகளை உணவாக உட்கொண்டாலும், எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாவதில்லை. 
இந்தப் பறவையினம், விஷத்தன்மை உள்ள விதையைச் செரிக்க வைக்கக்கூடிய மருத்துவ அறிவை எப்படிப் பெற்றுக் கொண்டது? இந்தப் பறவையினம், தான் உணவாக உட்கொண்ட விதையில் உள்ள விஷத்தன்மையை முறிக்கும் வித்தையை எப்படிக் கற்றுக் கொண்டது? ஒருவேளை இப்படி இருக்கலாமோ? கிளிகள் மருத்துவக் கல்வியைக் கற்று, அதன் மூலம் விஷத்தை முறிக்கக்கூடிய குணம் களிமண் தன்மையுள்ள பாறைகளுக்கு உண்டு என்பதை அறிந்திருக்குமோ? நிச்சயமாக அப்படி இல்லை.
ஒரு தாவர விதையைப் பார்த்தவுடன், அது விஷத்தன்மை உள்ளதா? இல்லையா? என்பதை ஆறறிவு படைத்த மனிதர்களால்கூட தெரிந்து கொள்ள முடியாது. அப்படியே அறிந்து கொண்டாலும், அந்தத் தாவர விதையிலுள்ள விஷத்தன்மையைப் போக்க மருத்துவ அறிவு இல்லாத சாதாரண மனிதர்களால் முடியாது. விஷத்தன்மையைப் போக்க வேண்டுமெனில், அதைப் பற்றிய விபரம் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, சாதாரண மனிதர்களால் தாவர விதையிலுள்ள விஷத்தன்மையை நீக்க முடியாது. ஆறறிவு படைத்த மனிதர்களின் நிலையே இவ்வாறு இருக்கும்போது, ஐந்தறிவு படைத்த பறவையினம் மருத்துவம் கற்றுக்கொண்டு, விஷத்தன்மையுள்ள தாவர விதையில் உள்ள விஷத்தை நீக்குவது  நடக்காத காரியம். மனிதன் பல வருடங்கள் படித்து, ஆய்வுசெய்து பெறக்கூடிய மருத்துவ அறிவு, கிளிகளுக்கு எதேச்சையாகக் கிடைத்திருக்கும் என்பது ஆறறிவு படைத்த மனிதர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதா? நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே கிளிகளுக்கு இந்த அறிவை வழங்கினான். அவனே அனைத்தும் அறிந்தவன். ஏனைய படைப்புகளைப் போன்று, கிளிகளும் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.
அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
'அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ், வானங்களையும், பூமியையும், அவற்றிற்கு  இடையிலுள்ளவற்றையும், உண்மையாகவும் குறிப்பிட்ட தவணைக்காகவுமே தவிர  படைக்கவில்லை. எனினும், நிச்சயமாக மனிதர்களுள்  பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.' (30: 08)
                 ******************************

குர்பானி-`அறுக்குமிடம்`



சென்னை போன்ற பெருநகரங்களில்
பலர் வாடகை வீடுகளிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் தொகுப்பு வீடுகளிலும் வசித்துவருகின்றனர். இவர்களுள் பலர் தனித்தனியாக குர்பானி கொடுக்க வசதியிருந்தும் போதிய இட வசதி இல்லாததால் கூட்டுக் குர்பானி கொடுத்து தம்முடைய தியாகத்தை நிறைவு செய்துவிடுகின்றனர். எனவே இவர்களைப் போன்றவர்களும் தாமே சுயமாக அறுத்துப் பலியிட வசதியாக ஒவ்வொரு பகுதியிலும் `அறுக்குமிடம்` ஒன்றை ஏற்படுத்தினால் அது அனைவருக்கும் வசதியாக இருக்கும். விசாலமான இட வசதி உள்ள பள்ளிவாசல்களில் இத்தகைய வசதியை ஏற்படுத்தலாம். விசாலமான இடம் உள்ளவர்கள் பொது நலனையும் நன்மையையும் நாடி இத்தகைய அறுக்குமிடத்தை ஏற்படுத்தலாம். ஆங்காங்கே உள்ள அரபி மதரசாக்களிலும் இவ்வசதியை ஏற்படுத்தலாம். நிறைய ஆடு , மாடுகள் அறுக்கப்படுவதால் நிறைய ஏழைகள் பயனடைவர்.

புதன், 4 நவம்பர், 2009

ஒமியாட் அறிவியல் கண்காட்சி















வியாழன், 22 அக்டோபர், 2009

கால்களை ஒடித்தோரை மன்னித்துவிட்ட மதானி


உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண் , மூக்குக்கு மூக்கு , காதுக்குக் காது , பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்கும் பழிவாங்கல் (அனுமதிக்கப்பட்டு) உள்ளது என அ(வர்களது வேதமான தவ்ராத்)தில் அவர்களுக்கு நாம் விதியாக்கினோம். ஆனால் , யார்  அவரை(ப் பழிவாங்காமல்) மன்னித்து விட்டுவிடுகிறாரோ அவரு(டைய பாவங்களு)க்கு அது பரிகாரமாகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்காதவர்களே அநீதி இழைத்தவர்கள் ஆவர்.  (05:45)

இறைநம்பிக்கை கொண்டோரே கொல்லப்பட்டோருக்காகப்  பழிவாங்கு(ம்போது நேர்மையோடு நடந்துகொள்)வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே, (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக ஒரு சுதந்திரமானவனும், ஓர் அடிமைக்குப் பதிலாக அடிமையும், ஒரு பெண்ணுக்குப் பதிலாகப் பெண்ணுமே (பழிவாங்கப்படுவர்). ஆனால், (கொலை செய்த) ஒருவருக்கு (கொலையுண்ட) அவருடைய சகோதர(ரின் உறவின)ரால் மன்னிப்பு ஏதேனும் வழங்கப்பட்டால், (கொலையுண்டவரின் உறவினர்) முறையோடு நடந்துகொள்வதும், அவருக்கு (மன்னிக்கப்பட்டவர்) சரியாக (இழப்பீட்டை)ச் செலுத்துவதும் கடமையாகும். இது உங்கள் ïரைவநிடமிருந்து (கிடைத்து)ள்ள சலுகையும் கருணையும் ஆகும். இதற்குப் பிறகும் ஒருவர் வரம்பு மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனை உண்டு. (02 ;179)

மேற்கண்ட இறைவசனத்தின் அடிப்படையில் `மன்னிப்பு` என்பதைத் தேர்ந்தெடுத்து, தம் கால்களை ஒடித்தோரை மன்னித்துவிட்ட மதானி அவர்களின் பெருந்தன்மையை நாம் போற்றுவோம்.

செவ்வாய், 20 அக்டோபர், 2009

அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவோம்


நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?[2:107 ]

* நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்![7:194 ]
* அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.[16:20 ]
* மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமானவர்களே.[22:73 ]
* அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு அருளை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.[33:17 ]
* நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்;. இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்;. யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.[4:48 ]

அறிவுடைய மக்களுக்கு அல்லாஹ்வின் வார்த்தைகளே போதுமானது.

படம் நன்றி;தினத்தந்தி

வியாழன், 8 அக்டோபர், 2009

வியாழன், 24 செப்டம்பர், 2009

புகைப்படங்கள்

புதன், 23 செப்டம்பர், 2009

வியாழன், 17 செப்டம்பர், 2009

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

என் முகவரி அட்டை

புதன், 26 ஆகஸ்ட், 2009

குர்'ஆன் தேடல்










Search in the Quran




















Search:








Download | Free Code


www.SearchTruth.com



செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

பல்வேறு நோய்களுக்கான துஆ


பன்றிக் காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு இந்த துஆவை ஓதிக்கொள்க.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

பன்றிக்காய்ச்சல்-முஸ்லிம்களைத் தாக்குவதில்லை


இன்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகின்ற பன்றிக் காய்ச்சல் பன்றியின் மூலம் பரவுவதில்லை என்பது பலருக்குத் தெரியாது. அது ஒரு நுண்ணுயிர்க் கிருமியால் பரவுகிறது. அல்லாஹ் பிர்அவ்னுக்கு அனுப்பிய பல்வேறு சோதனைகளைப் போல்தான் இப்போது நம்மிடையே பரவிவருகின்ற பறவைக் காய்ச்சல் பன்றிக்காய்ச்சல் போன்றவை ஆகும்.

ஆனால் இது முஸ்லிம்களைப் பெரும்பாலும் தாக்குவதே இல்லை. ஏனென்றால். அண்மையில் ஜெர்மன் பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கிடைத்த தகவலின்படி, இந்நோய்க் கிருமிகள் மூக்குத் துவாரங்களின் வழியேதான் மிக வேகமாகப் பரவுகின்றன. ஆனால், முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் ஐவேளைத் தொழுகைக்காக உழூ செய்கின்றபோது தம்முடைய மூக்கையும் சிந்தி சுத்தம் செய்வதால் அந்நோய்க் கிருமிகள் அவர்களை எளிதில் தாக்கமுடிவதில்லை.

என்னே நபி (ஸல்) அவர்களின் உன்னதமான வழிமுறை! என்னே மகிமை! எனவே முஸ்லிம் சகோதர சகோதரிகளே! ஐவேளைத் தொழுகையைக் கடைப்பிடியுங்கள். தவறாமல் மூக்கைச் சிந்தி சுத்தம் செய்யுங்கள்.
அல்லாஹ் நம் யாவரையும் தொற்றுநோய்ப் பீதியிலிருந்தும் அது தாக்குவதிலிருந்தும் காப்பானாக!

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

ரிஸ்க் -வாழ்வாதாரம்

ரிஸ்க்வாழ்வாதாரம்

வெள்ளி, 31 ஜூலை, 2009

வியாழன், 30 ஜூலை, 2009

புதன், 29 ஜூலை, 2009

மாஷா அல்லாஹ்!

மாஷா அல்லாஹ்!

ஷஅபான் பாதிக்குப் பிறகு

ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
நன்றி;த.த.ஜ.நெட்

செவ்வாய், 28 ஜூலை, 2009

ஞாயிறு, 26 ஜூலை, 2009

பாகவியார் வீடியோ

அன்றாட துஆக்கள் (சிறுவர்களுக்கு)

அன்றாட துஆக்கள் (சிறுவர்களுக்காக)

சூரா யாசீன் கிரா'அத்