புதன், 30 ஏப்ரல், 2014
புதன், 23 ஏப்ரல், 2014
வியாழன், 3 ஏப்ரல், 2014
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (04 04 2014)
அஸ்ஸலாமு அலைக்கும்
நாடறிந்த ஆலிம் பெருந்தகை,
ஆன்மிகப் பேரொளி மௌலானா முஹம்மது அப்துல் கவி ஹழ்ரத் அவர்கள் குஜராத்
காவல்துறையால் (மோடி அரசால்) கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அதைக் கண்டித்து
சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதில் தாங்கள் அனைவரும் தவறாது
கலந்துகொள்ளுமாறு அன்போடு
கேட்டுக்கொள்கிறோம்.
.
நாள்: 04 04 2014
இடம்:
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை
நேரம்: 3: 30 மாலை (அஸ்ர்
தொழுகைக்குப்பின்)
லேபிள்கள்:
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
புதன், 2 ஏப்ரல், 2014
உரையாடல்-2
(மக்தப் மத்ரசா ஆண்டுவிழாவில் இரண்டு பெண்பிள்ளைகளுக்கு இடையே நடந்த உரையாடல்)
ஆமினா: ஆயிஷா! இன்னைக்கு மத்ரசா போனாயா?
ஆயிஷா: ஆம், போனேன். நீ ஏன் வரல?
ஆமினா: எனக்கு உடம்பு சரியில்ல. அதனால வரல ஆயிஷா. இன்னைக்கு உஸ்தாத் என்ன சொல்லிக் கொடுத்தாங்க?
ஆயிஷா: தும்மியபின் ஓதுற துஆ சொல்லிக் கொடுத்தாங்க.
ஆமினா: அதை நீ மனப்பாடம் செய்துவிட்டாயா?
ஆயிஷா: ஆம்! செய்துவிட்டேன். நான் உனக்குச் சொல்லித் தரவா ஆமினா?
ஆமினா: ஆமா ஆயிஷா! அவசியம் சொல்லித்தா. நானும் அதை மனப்பாடம் செய்துக்குறேன்.
ஆயிஷா: ஒருவர் தும்மியபின், அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லணும். அவரின் அருகில் இருப்பவர் அதைக் கேட்டால், யர்ஹமுகல்லாஹ் என்று கூறி அவருக்கு துஆ செய்யணும். அதன்பின் அதைத் தும்மியவர் கேட்டால், யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹ் பாலகும் என்று சொல்லணும். புரிந்ததா ஆமினா?
ஆமினா: ஆமா! நன்றாகப் புரிந்தது.
ஆயிஷா: ஆமினா! நாம் தும்மியபிறகு அல்ஹம்து லில்லாஹ் என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா?
ஆமினா: எனக்குத் தெரியாதே ஆயிஷா. நீயே சொல்லு.
ஆயிஷா: நம்முடைய நுரையீரலுக்குள் செல்லக்கூடிய தூசுவை வெளியே தள்ளுவதற்காகத்தான் அல்லாஹ் தும்மலை ஏற்படுத்துறான். எனவேதான் நாம் அவனுக்கு நன்றை செலுத்துவதற்காக அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுகிறோம்.
ஆமினா: அப்படியா? இதில் இவ்வளவு பெரிய விஷயம் இருக்கா? சுப்ஹானல்லாஹ்.
ஆயிஷா: நெறைய பேர் இது பற்றி ஏதும் தெரியாம, தும்மியபிறகு அல்ஹம்து லில்லாஹ் சொல்லாம இருக்காங்க. எனவே நாம் இதை நம்முடைய வீட்டிலுள்ளோரிடம் எடுத்துச்சொல்லி அவர்களையும் இதச் சொல்ல வைக்கணும்.
ஆமினா: கண்டிப்பா. நானும் என்னுடைய வீட்ல சொல்லி, எல்லாருக்கும் இதைக் கற்றுக்கொடுக்குறேன் ஆயிஷா. வா போவோம்.
உஸ்தாத் நூ அப்துல் ஹாதி பாகவி
உரையாடல்-1
(மக்தப் மத்ரசா ஆண்டுவிழாவில் இரண்டு பெண்பிள்ளைகளுக்கு
இடையே நடந்த உரையாடல்)
ஆமினா: ஆயிஷா!
விஷயம் தெரியுமா?
ஆயிஷா: என்ன விஷயம்
ஆமினா?
மார்க்க விஷயமா? உலக விஷயமா?
ஆமினா: மார்க்க
விஷயமெல்லாம் இல்லை. உலகம் விஷயம்தான் ஆயிஷா.
ஆயிஷா: என்ன விஷயம்னு
சொல்லு.
ஆமினா: பக்கத்துல
வா! ஒரு இரகசியம். நம்மோட ஒன்னாப் படிச்சாலே நஃபீசா, அவ பக்கத்துத் தெருவுல உள்ள முருகேசனைக் கல்யாணம்
செய்துகிட்டாளாம்.
ஆயிஷா: அஸ்தஃக்ஃபிருல்லாஹ்!
நாம மூனு பேரும் ஒன்னாத்தானே ஸ்கூல் போவோம். அவ நல்லாப் படிப்பவளாச்சே? அவளா இப்படிச் செய்துட்டா? என்னாலே நம்பவே முடியலையே!
ஆமினா: ஆமா ஆயிஷா!
அவளோட அப்பா, அம்மா ரெண்டு பேரும்
அவளைச் செல்லமா வளர்த்தாங்க. அவ கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. கூடவே செல்போனும்
வாங்கிக் கொடுத்தாங்க. அதனால வந்த வெனைதான் இது.
ஆயிஷா: அப்படின்னா, அவளுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி எதுவும் தெரியாதா?
ஆமினா: ஆமா! அறவே
தெரியாது. ஒரு பெண் பருவ வயதை அடைந்துவிட்டால் முகம், கை, கால் தவிர உடல் முழுவதும்
மறைக்க வேண்டும். பார்வையைத் தாழ்த்தி நடக்க வேண்டும் என்பதுதான் இஸ்லாம் கூறும்
கட்டளை. இதைத்தான் நாம் நம்முடைய மக்தப் மத்ரசாவில் படித்தோம். அவதான் மத்ரசாவுக்கே
வரவில்லையே?
ஆயிஷா: அது அவளுக்குத்
தெரியாமல் போனதற்கு யார் காரணம்?
ஆமினா: அவளோட
பெற்றோர்தான் காரணம். அவங்க அவளெ நாள்தோறும் மக்தப் மத்ரசாவுக்கு அனுப்பியிருந்தா
அவள் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றித் தெரிந்திருப்பா. அதனால் அவ தவறான பாதையில போயிருக்கமாட்டா.
ஆயிஷா: அப்படின்னா, பெற்றோருடைய கடமை என்ன?
ஆமினா: குழந்தை
வளர்ந்து,
பேசத் தொடங்கிவிட்டால் அதற்கு
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற ஏகத்துவக் கலிமாவைச் சொல்லிக் கொடுக்க
வேண்டும். பிறகு படிப்படியா இஸ்லாமிய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து, குர்ஆனைக் கற்பிக்க வேண்டும். பெற்றோருக்கு ஓதத்
தெரியாவிட்டால் மத்ரசாவுக்கு அனுப்பி ஓத வைக்க வேண்டும். இப்படியெல்லாம் ஒரு பெற்றோர்
செய்தால் பிள்ளைகள் வழிகெட்டுப் போகமாட்டாங்க. புரிந்ததா?
ஆயிஷா: நன்றாகப்
புரிந்தது. அப்படின்னா, உலகப் படிப்பு
படிக்க,
பெண்பிள்ளைகளை ஸ்கூலுக்கு
அனுப்பக் கூடாதா?
ஆமினா: அப்படியில்லை.
தாராளமா அனுப்பலாம். ஆனால் பெண்பிள்ளைகளைப் பெண்கள் மட்டும் படிக்கிற ஸ்கூலில்தான்
சேர்க்க வேண்டும். ஏனென்றால், ஆண்-பெண் கலந்து படிக்கும் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதால் நிறைய
ஆபத்துகள் உண்டு.
ஆயிஷா: அப்படின்னா, பெண்கள் மட்டும் படிக்கிற ஸ்கூல் நம்ம மஹல்லாவில்
இல்லையே?
என்ன செய்வது?
ஆமினா: நம்ம மஹல்லாவில்
பெண்கள் கல்விக் கூடங்களை நாமேதான் உருவாக்கணும். அது மட்டுமல்லாமல் மகளிர் அரபிக்
கல்லூரியையும் நடத்தணும். அதில் படிக்கிற மாணவிகள் ஆலிமாக்களாகி நம் சமுதாய மக்களுக்கு
தீன் பணி செய்வாங்க. தம்மோட பிள்ளைகளையும் ஷரீஅத்படி வளர்ப்பாங்க.
ஆயிஷா: இதையெல்லாம்
நாம் இப்ப யாரிடம் சொல்வது?
ஆமினா: வா ஆயிஷா!
நாம் நம்முடைய தோழிகளையும் சேர்த்துக்கொண்டு நம்ம மஹல்லா பள்ளிவாசல் நிர்வாகிகளிடம்
மகளிர் கல்விக்கூடங்களை ஏற்படுத்துவதன் அவசியத் தேவையை எடுத்துச் சொல்லி இது போன்ற
பிரச்சனை இனியும் ஏற்படாமல் தடுத்து நிறுத்துவோம்.
ஆயிஷா: சரி ஆமினா!
கண்டிப்பா நானும் உன்னோட வாறேன். வா போவோம்!
-உஸ்தாத் நூ அப்துல் ஹாதி பாகவி
செவ்வாய், 1 ஏப்ரல், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)