செவ்வாய், 27 ஜூன், 2017

மனத்துணிவை இழந்துவிடாதீர்!


ஹாஃபிழ் ஜுனைத் ஷஹீதாக்கப்பட்ட பின், ஒருவர் தம் ஆற்றாமையையும் தம் எதிர்பார்ப்பெல்லாம் வீணாகி நிராசையாகிவிட்டதையும் மனம் நொந்து எழுதியிருந்தார். அவரது மனவேதனையை நாம் அனைவரும் உணர்கிறோம். முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்கிறோம்.

ஆனால் இந்த நேரத்தில் நாம் மனத்துணிவை இழந்துவிடக்கூடாது. ஷைத்தானின் சூழ்ச்சி விளையாட்டைக் கண்டு நாம் நிராசையாகிவிடக் கூடாது. இப்போதுதான் நாம் நம்முடைய இறைநம்பிக்கையை வலுப்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம். அசைக்க முடியாத இறைநம்பிக்கையோடு ஷைத்தான்களை எதிர்கொண்டால் இறையுதவி மிக அருகிலேயே உள்ளது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிட வேண்டாம். பல உயிர்களை இழந்துதான் இந்த இஸ்லாமிய மார்க்கம் தலைநிமிர்ந்து நிற்கிறது. இனி இந்த மார்க்கத்திற்குத்தான் மிகப் பெரிய வெற்றி. உலகெங்கும் இஸ்லாமிய மார்க்கத்தை ஊன்றிப் படிக்கக்கூடிய சூழ்நிலையும் கூர்ந்து கவனிக்கக்கூடிய நிலையும் பரவலாகக் காணப்படுகிறது.

இத்தருணத்தில் நாம் செய்ய வேண்டியவை, இறைவழிபாடும், பிரார்த்தனையும், கூடி வாழ்தலுமே ஆகும். சாதி, சமய வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட நம்மை அல்லாஹ் ஒருபோதும் கைவிட மாட்டான். யாரும் மனத்துணிவை இழந்துவிடாதீர்கள்.


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 

கருத்துகள் இல்லை: