திங்கள், 5 ஜூன், 2017

ஜன்னத்துல் ஆலியா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா



சென்னை மணலியில் அமைந்துள்ள ஜன்னத்துல் ஆலியா மகளிர் அரபுக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா 06 05 2017 அன்று திருஞான சம்பந்தம் திருமண மஹாலில் நடைபெற்றது. மௌலவி ஹாஃபிழ் கே. அப்துல் காதர் ஜெய்லானி ரப்பானி கிராஅத் ஓதி நிகழ்வைத் தொடங்கிவைத்தார். கே.எஸ். இஸ்மாயில் சிராஜி நபிபுகழ் கீதம் இசைத்தார். மௌலவி அப்துல்லாஹ் அல்தாஃபி வரவேற்புரை நிகழ்த்திய பின், இனிய திசைகள் துணை ஆசிரியர் முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி துவக்கவுரையாற்றினார்.

அதன்பின் முனைவர் மௌலவி வி.எஸ். அன்வர் பாதுஷாஹ் உலவி, ஜமாலிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் மௌலவி சையது நியாஸ் அஹ்மத் ஜமாலி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். ஆலிம்கள் பலர் வாழ்த்துரை வழங்கிய பின், இக்கல்லூரி முதல்வர் எஸ். எம். ஜாஹிர் ஹுஸைன் மிஸ்பாஹி பாகவி ஆண்டறிக்கை வாசித்தார். அதன்பின், மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவி, எம். நூருஷ் ஷிஃபானா, எஸ். ரம்ஜான், ஜே. ரம்ஜான் பேகம், ஏ. ரஜியா பேகம், ஏ. காதர்மா ஆகிய ஐந்து மாணவிகளுக்கு அவர்கள்தம் தந்தையரிடம் பட்டம் வழங்கிப் பேருரை நிகழ்த்தினார். இக்கல்லூரியின் பொறுப்பாளர் மௌலவி என். முஹம்மது இத்ரீஸ் ஜமாலி நன்றி நவில, துஆவுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
-தகவல்: பாகவியார்
======================


கருத்துகள் இல்லை: