வியாழன், 8 ஜூன், 2017

ஸகாத் கொடுப்போர் கவனத்திற்கு


நீங்கள் உங்கள் ஸகாத்தை வேட்டி, சேலை உள்ளிட்ட ஆடைகளாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் ஏழைகளாகக் காணும் நபர்களுக்குப் பணமாகவே கொடுக்கலாம்.

நீங்கள் ஸகாத் வழங்கும்போது, அதை யாருக்கு வழங்குகின்றீர்களோ அவர் அதற்குத் தகுதியானவரா என்பதையும் கவனித்து வழங்குங்கள். நம் பொறுப்பு முடிந்துவிட வேண்டும் என்பதற்காக யார் யாருக்கோ கொடுத்து விடாதீர்கள்.

நீங்கள் உங்கள் மஹல்லா இமாமுக்கு ஸகாத் கொடுத்தால் அவர் அதை வாங்கத் தகுதியானவரா என்று பார்த்துக் கொடுங்கள். இமாம்கள் சிலர் நல்ல வசதியாகவே வாழ்கிறார்கள். அவர்களுக்கும் நீங்கள் ஸகாத் வழங்குவது முறையில்லை. அவர்களுடைய அன்பைப் பெற வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு வழங்க நினைத்தால், உங்களுடைய ஸகாத் அல்லாத பணத்தை அன்பளிப்பாக வழங்குங்கள்.

ஆங்காங்கே பணியாற்றக்கூடிய ஆலிம்கள் -ஸகாத் வாங்கத் தகுதியில்லாத வசதியானவர்கள்- “எங்களுக்கு நீங்கள் உங்களின் ஸகாத்தை அன்பளிப்பாகக் கொடுக்காதீர்கள். உங்களின் ஸகாத் அல்லாத பணத்தையே அன்பளிப்பாக நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று பொது அறிவிப்புச் செய்தால் அத்தகைய இமாம்கள்மீது மக்களுக்கு ஒரு மரியாதை ஏற்படுவதோடு  நாமும் நம் பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படும்.

சமுதாய இயக்கங்களுக்குக் கொடுப்பதைத் தவிர்த்து அக்கம் பக்கம்  உள்ள ஏழைகளைப் பார்த்து உங்கள் ஸகாத்தை வழங்குங்கள். கல்வியுதவி, திருமண உதவி, மருத்துவ உதவி உள்ளிட்டவற்றிற்காகவும் உங்கள் ஸகாத் பயன்படட்டும்.

அல்லாஹ் விதித்த ஸகாத்தை நாம் உரிய முறையில் வழங்கி, பயனுள்ள மழையை அவனிடமிருந்து பெறுவோமாக.

-மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி


கருத்துகள் இல்லை: