ஞாயிறு, 13 மார்ச், 2016

"பூபாள இராகங்கள்" கவிதைத் தொகுப்பு நூல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

என்னுடைய "பூபாள இராகங்கள்" கவிதைத் தொகுப்பு நூல் வெளிவந்துவிட்டது என்ற செய்தியைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சிறந்த கவிதைகளை மட்டும் பதிவுசெய்துள்ளேன். ஒவ்வொன்றும் ஒரு கருத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளமை கண்டு படைத்தோன் அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துகிறேன்.

இந்நூலைப் பார்வையிட்டு ஆங்காங்கே கண்ட பிழைகளைத் திருத்திக் கொடுத்ததோடு, இந்நூல் சிறக்கும் வகையில் நல்லதொரு நடுநிலையான மதிப்புரையை வழங்கிய முனைவர் சேமுமு.முகமதலி அவர்களுக்கும், இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி அணிசேர்த்த புதுக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ஹ.மு.நத்தர்சா அவர்களுக்கும், வாழ்த்துரை வழங்கிய  காயிதே மில்லத் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ஹாஜாகனி அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இக்கவி நூல் திக்கெங்கும் பரவி, தமிழ்த் தாகம் உள்ளோரின் தாகத்தைத் தீர்க்கும் வண்ணம் அமைய வேண்டுமென்ற தீராத ஆவலுடன் தூயோன் அல்லாஹ்விடம் இரு கைகளுயர்த்திப் பிரார்த்தனை செய்கிறேன்.

                     அன்புடன்
கவிஞர்
                     நூ.அப்துல் ஹாதி பாகவி

இந்நூல் கிடைக்கும் இடங்கள்:

சலாமத் புக் ஹவுஸ், மண்ணடி : 044 4216 7320

பஷாரத் பப்ளிகேஷன், மண்ணடி: 97899 99256

த்ரீஎம் பப்ளிஷர், அங்கப்பன் தெரு, மண்ணடி: 98842 83949/ 984000 4168/ 98403 61227

ரஹ்மத் ஆங்கில நூல் நிலையம், மயிலாப்பூர், சென்னை: 9940 059400 

==============
பக்கங்கள்: 152
விலை: 100/-
வெளியீடு: ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம்
224/ 733 முதல் தளம், டி எச் சாலை,
புதுவண்ணாரப்பேட்டை. சென்னை 81


  


கருத்துகள் இல்லை: