திங்கள், 23 நவம்பர், 2015

வாய்ப்புள்ளோர் அனைவரும் வருக!


“முஹம்மது பின் இஸ்ஹாக் பின் குஸைமா (ரஹ்) ஹதீஸ்கலையை விளங்கிய விதமும் விளக்கிய விதமும்”
எனும் தலைப்பில் நான் முனைவர் (Dr) பட்டத்திற்கான ஆய்வு மேற்கொண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஒப்படைத்திருந்தேன். அதற்கான நேர்முக வாய்மொழிப் பொதுத் தேர்வு (Viva Voce) 26. 11. 2015 அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது. எனவே வாய்ப்புள்ளோர் அனைவரும் வந்து கலந்துகொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இடம்: சென்னைப் பல்கலைக் கழக மெரினா வளாகம்
(கண்ணகி சிலையை அடுத்துள்ள திருவள்ளுவர் சிலை எதிரில்)
கடற்கரைச் சாலை-காமராஜர் சாலை
சேப்பாக்கம், சென்னை-5
நேரம்: காலை 11 மணியளவில்
குறிப்பு: இமாம் முஹம்மது பின் இஸ்ஹாக் பின் குஸைமா (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரீ 223இல் பிறந்து 311இல் மறைந்த மாமேதை. இவர் ஈரானில் அமைந்துள்ள குராசான் மாகாணத்தில் உள்ள நைசாபூரில் பிறந்தவர். அம்மாகாணத்திலேயே தலைசிறந்த இமாமாகத் திகழ்ந்தார். இவர் புகாரீ, முஸ்லிம் ஆகிய இமாம்களின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தொகுத்துள்ள ஸஹீஹ் இப்னு குஸைமா என்னும் நபிமொழித் தொகுப்பு நூல் மிகவும் புகழ்பெற்றது.


கருத்துகள் இல்லை: