வியாழன், 25 ஜனவரி, 2024

இடையில் நுழையாதே / Idaiyil Nuzhaiyaathe/ சிறுகதை / Do not interfere in a...

இடையில் நுழையாதே! (சிறுகதை)

காட்சி வடிவில்...


அன்வர் உடைய அன்னை சுல்தானா தன்னுடைய மகனுக்குப் பெண் பார்த்துக்கொண்டிருந்தாள். சொந்தம் விட்டுப் போகக் கூடாதென்று தன்னுடைய அண்ணன் ஆஸிப் வீட்டுப் படியேறி அவருடைய மகள் ருகையாவைத் தன்னுடைய மகனுக்குப் பெண் கேட்டாள். 

தங்கைக்கும் அண்ணனுக்கும் நீண்டகால இடைவெளி இருந்தது. ஏதோ ஒரு பிரச்சனைக்காக நீண்ட காலம் இருவரும் பேசாமலே இருந்துவிட்டார்கள். இருந்தாலும் தன் மகனின் திருமணத்தின் மூலம் அப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து, இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஒரு நல்லுறவு மலர வேண்டுமென நினைத்தாள் சுல்தானா. அதனால்தான் தன் அண்ணன் மகளைப் பெண் கேட்க அவர் வீட்டுப் படியேறினாள். 

நீண்ட காலம் பார்க்காத தங்கையை இன்று பார்த்த மகிழ்ச்சியில் பேச வார்த்தையின்றித் திகைத்துப்போய் நின்றான் ஆஸிப். சுல்தானா, தான் வந்த விசயத்தை அண்ணனிடம் கூறியதும், தன் மகளை தன் தங்கை மகனுக்குத் திருமணம் செய்துதரச் சம்மதித்தான். பின்னர் ஒரு நாள் உறவினர்கள் அனைவரின் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொடுக்கல் வாங்கல் குறித்தும் பேசிமுடித்துவிட்டார்கள்.  

ஆனால் இந்தச் சம்பந்தம் ஆஸிபின் மனைவி ஸைத்தூனுக்குப் பிடிக்கவில்லை. ...


கருத்துகள் இல்லை: