சனி, 27 ஜனவரி, 2024

தேனும் சர்க்கரைப் பாகும் (சிறுகதை) Honey and Sugar molasses (short sto...



 -மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி

------------------------------

 

என்னக்கா ஆமினா! நல்லா இருக்கீங்களா?- பக்கத்துத் தெருவில் குடியிருக்கிற ஆயிஷா விசாரித்தாள்.

 

ம். இருக்கேன். என்ன, ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளே காணோம்! வீட்ல அப்டி என்னதான் செய்யுறே?-எதிர்கேள்வி கேட்டாள் ஆமினா.

 

வீட்ல நெறைய வேலைதான். புத்தக அலமாரியில் ஒரு எலி புகுந்து புத்தகங்களையெல்லாம் கடித்துக் கடித்துக் குதறிக்கொண்டிருந்தது. இப்பத்தான் காலாண்டுத் தேர்வு லீவு விட்டாங்க. பிள்ளைகளையெல்லாம் எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டு, எல்லாப் புத்தகங்களையும் கீழே இறக்கி வச்சு, சுத்தம் செய்துட்டு. ஒரு எலிக்கட்டை வாங்கி அந்த எலியப் பிடுச்சு அடிச்சிட்டு இப்பத்தான் நிம்மதியா இருக்கேன்-மகிழ்ச்சியோடு சொன்னாள் ஆயிஷா. 

 

ஏன்டி ஆயிஷா! எலிய அடிச்சுக் கொல்லலாமா? ஒரு உயிரினத்தைக் கொல்வது பாவம் இல்லையா?

 

அது ஒன்னும் பாவமில்லையே. எலி, தேள், பாம்பு, பல்லி போன்ற மனிதர்களுக்குத் தொல்லை தருகிற உயிரினங்களைக் கொல்லலாம் என்று நமது நபிகள் நாயகம் சொல்லியிருக்காங்க. அதனால பாவம் ஏதும் இல்லை. அது மட்டுமில்லை. பல்லியை ஒரே அடியில அடிச்சா நூறு நன்மையாம்!-ஆயிஷா தெளிவாகச் சொன்னாள்.

 

அது ஏன்டி, பல்லிய அடிச்சா மட்டும் நன்மை?-ஆமினா விசாரித்தாள்.

 

அது ஏன்னா, நம்ரூத் அரசன் இப்ராஹீம் நபிய நெருப்புக் குண்டத்துல போட்டபோது எல்லா உயிரினங்களும்...


கருத்துகள் இல்லை: