சனி, 13 ஆகஸ்ட், 2022

உளூ செய்த பின் ஓத வேண்டிய துஆ



أشهد أن لا إله إلا الله وحده لا شريكَ له، وأشهد أنَّ محمدًا عبده ورسوله، اللهم اجعلني من التَّوابين، واجعلني من المتطهرين"

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு  வரஸூலுஹு. 

அல்லாஹும்மஜ் அல்னீ மினத் தவ்வாபீன் வஜ் அல்னீ மினல் முத்ததஹ்ஹிரீன்.

பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். அவன் தனித்தவன்; அவனுக்கு இணை யாருமில்லை. 

நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாராகவும் திருத்தூதராகவும் இருக்கின்றார்கள் என்றும்  நான் சாட்சி கூறுகிறேன்.

இறைவா! பாவமன்னிப்புத் தேடுவோருள் ஒருவராகவும் தூய்மையாளர்களுள் ஒருவராகவும் என்னை ஆக்குவாயாக.

என்று ஓதினால் அவருக்காகச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பும் வாசல் வழியாக அதில் நுழைந்து கொள்ளலாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

(நூல் : திர்மிதீ)
_________________

கருத்துகள் இல்லை: