புதன், 15 ஏப்ரல், 2020

நிர்வாகத்தில் மதவேற்றுமை காட்டும் அரசு நீடிக்காது!


=======================
புரஃபசர் அர்னால்ட் தமது “தஅவத்தே இஸ்லாம்” என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

பொறுப்பு வாய்ந்த ஒரு பெரிய அதிகாரி அவுரங்கஜேபிற்கு ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் ‘சம்பளப் பட்டுவாடா செய்யும் பொறுப்பு வகித்துள்ள அந்த இரண்டு அதிகாரிகளும் நெருப்பை வணங்கும் மஜூசியர்கள். எனவே அவர்களை அப்புறப்படுத்திவிட்டு அவர்களுக்குப் பதிலாக அனுபவமுள்ள இரண்டு முஸ்லிம்களை நியமிக்க வேண்டுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பதில் எழுதிய அவுரங்கஜேப், “அரசு விஷயத்தில் மதத்தைப் புகுத்துவது விவேகமாகாது. உமது கோரிக்கைப்படி நான் நடந்து கொண்டால் எனது ஆட்சியிலுள்ள பல்லாயிரக்கணக்கான அதிகாரிகளை நான் மாற்ற வேண்டிவரும். அது சாத்தியமாகாது! குடிமக்களை ஆளக்கூடிய அரசன், மதவேறுபாடுகளைப் பார்க்கக்கூடாது. குடிமக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்ப்பதே அரசனது கடமை-இலட்சியம்-நேர்மையாகும். இதில் பாகுபாடு செய்யும் அரசரின் ஆட்சி நெடுநாள் நீடிக்காது!” என்று குறிப்பிட்டிருந்தார்.

இத்தகைய ஒரு நேர்மையான மொகலாய மன்னரைத்தான் சில அறிவிலிகள் ‘இந்து மதத்துக்கு எதிரானவர்’ என்று வசைபாடுகின்றனர்.


நூல்: இந்தியாவை ஆண்ட
முஸ்லிம் மன்னர்கள்
ஆசிரியர்: மர்ஹூம் குலாம் ரசூல்
வெளியீடு: காஜியார் புக் டிப்போ
தஞ்சாவூர்.
முதற்பதிப்பு: 1998

மறுபதிப்பு விரைவில் வெளிவருகிறது இன் ஷா அல்லாஹ்

-நூ. அப்துல் ஹாதி பாகவி
15 04 2020

கருத்துகள் இல்லை: