வியாழன், 8 ஆகஸ்ட், 2019

பயனுள்ள நூல்களைப் பரிசளிக்கலாமே?


ஒவ்வொருவரும் தம் பெற்றோரின் நாற்பதாம் நாள் நினைவாக அல்லது ஆண்டு நினைவாக விருந்து ஏற்பாடு செய்து உறவினர்களுக்கும் ஏனையோருக்கும் வழங்குவது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது அவர்கள் தம் பெற்றோரின் பெயரையும் அவர்கள் இறந்த தேதியையும் குறிப்பிட்டு யாஸீன் நூலையோ மன்ஸில் நூலையோ வழங்குவது வழக்கமாக உள்ளது. இவ்வாறு பலர் வழங்கி, வழங்கி ஒவ்வொருவரின் வீட்டிலும் பத்துக்கும் மேற்பட்ட யாஸீன், மன்ஸில் நூல்கள் உள்ளன. ஓதத்தான் நேரமில்லை. சிலர் ஓதலாம்.

எனவே பெற்றோரின் நினைவாக நூல் வழங்குவோர் இவை அல்லாத பயனுள்ள நூல்கள் எவ்வளவோ உள்ளன. அவற்றுள் ஏதேனும் ஒன்றைக் கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும். அந்நூல் வாயிலாக ஒருவர் நல்வழி பெற்று, நல்லறங்கள் செய்யத் தொடங்கிவிட்டால் அந்நன்மைகள் யாவும் நம் பெற்றோருக்கு, நிலையான நல்லறமாகச் சென்று சேர்ந்துகொண்டே இருக்குமல்லவா?

இனியாவது இந்தக் கோணத்தில் சிந்தித்து, பயனுள்ள நூல்களைப் பரிசளிப்போம்.

-முனைவர் நூ. அப்துல் ஹாதி பாகவி, மணலி, சென்னை-68
08.08.2019 06.12.1440
==================================


கருத்துகள் இல்லை: