திங்கள், 8 அக்டோபர், 2018

திசை திருப்பும் தீர்ப்புகள்!



ஐயர் ஆற்றுக்குக் குளிக்கப் போனார். குளித்து முடித்தபின் ஆடைகளைக் காணவில்லை. செய்வதறியாது திகைத்தார்; பதைபதைத்தார். திடீரென ஒரு யோசனை தோன்றியது. ஆற்றில் பெரிதான ஒரு மீனைப் பிடித்தார். அதைக் கையில் ஏந்தியவாறு தெருவில் நடந்தார். 


மீனோடு ஐயரைக் கண்ட மக்கள், “அய்யய்யே! ஐயர் கையில மீனோடு போறார்” என்றே பேசினர். அவர் அம்மணமாகச் செல்வதை யாரும் கவனிக்கவில்லை. அது பற்றி யாரும் பேசவுமில்லை. 


இன்றைய ஆட்சியாளரின் சூழ்ச்சி இதுதான். மக்களுக்குப் பயனுள்ள ஆட்சியைக் கொடுக்காமல் பெருமுதலாளிகளுக்குச் சாதகமான எல்லாவற்றையும் செய்துகொண்டு, தம்முடைய குறைகள் எது பற்றியும் பேசாதிருக்க அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மக்களின் மதஉணர்வுகளைக் கிளறிவிடும் தீர்ப்புகள் அவ்வப்போது அள்ளித் தெளிக்கப்படுகின்றன. 


1. முத்தலாக் அவசரச் சட்டம், 2. சபரிமலை கோயிலுக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்ல அனுமதி, 3. முஸ்லிம்களுக்குப் பள்ளிவாசல்கள் அவசியமா?, 4. ஓரினச் சேர்க்கை குற்றமல்ல, 5. கள்ளத்தொடர்பு குற்றமல்ல.


மக்கள் மறந்தவை: 1. ஆங்காங்கே ஏற்படும் தேர்தல் தோல்விகள், 2. ரஃபேல் ஊழல் உள்ளிட்ட பல ஊழல்கள், 3. பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, 4. டாலருக்கு நிகரான ரூபாய் வீழ்ச்சி, 5. பொருளாதாரச் சரிவு உள்ளிட்ட எத்தனையோ. 


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 



கருத்துகள் இல்லை: