திங்கள், 8 அக்டோபர், 2018

ஒருபால் உறவு ஒரு சமூகக்கேடு!


-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.

இவ்வாண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உச்சநீதி மன்றம் வரலாற்றுப் பிழையான ஓர் அசிங்கமான தீர்ப்பை வழங்கியது. இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள 377ஆம் பிரிவை நீக்கி, ஒருபால் உறவு குற்றமில்லை எனத் தீர்ப்பளித்தது. 

ஓர் ஆண் மற்றோர் ஆணோடு, ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு வாழ்க்கை நடத்துவது இயற்கைக்கு ஒவ்வாதது. சமூக வாழ்க்கைக்கு எதிரானது. மனிதன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக மாறிக்கொண்டிருக்கிறான் என்பதற்கு இத்தீர்ப்பு ஒரு சான்றாகத் திகழ்கிறது. “நாம் மனிதனை அழகிய தோற்றத்தில் படைத்திருக்கிறோம். (அவனுடைய தீய நடத்தையின் காரணமாகப்) பின்னர், அவனைத் தாழ்ந்தவர்களிலும் மிகத் தாழ்ந்தவனாக நாம் ஆக்கிவிடுகின்றோம்” (95: 4-5) என்று உயர்ந்தோன் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள செய்தி இங்கு நினைவுகூரத்தக்கது.

ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக இணைந்து, அவர்கள் தம் தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு இயற்கையான ஒரு வழிமுறையை வைத்திருக்கும்போது ஒரு செயற்கையான வழியைத் தேடுவது படைத்த இறைவனோடு போட்டிபோடுவதாக அமைகிறது. இதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஆணும் ஆணும் புணரும் இந்த இழிசெயல் பல்வேறு பால்வினை நோய்களுக்குக் காரணமாகின்றது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 

ஆணும் ஆணும் புணரும் இந்த இழிசெயலை முதன் முதலில் தொடங்கிவைத்தோர் இறைத்தூதர் லூத் (அலை) அவர்களின் சமுதாய மக்களே ஆவர். அவர்களின் இந்த இழிசெயலைக் கண்டித்து, பலமுறை திருத்த முயன்றும் அவர்கள் திருந்தவில்லை. அவர்கள் தம் இழிசெயலைத் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தனர். இறுதியில் அவர்களை அல்லாஹ் அழித்தொழித்தான். அது குறித்துத் திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:

நம்முடைய கட்டளை(யின் நேரம்) வந்ததும் அவர்களுடைய ஊரைத்  தலைகீழாகக் கவிழ்த்து விட்டோம். மேலும் (அதற்கு முன்னர்) அவர்கள்மீது சுடப்பட்ட செங்கற்களை (மழையைப் போல்) பொழியச் செய்தோம். (11: 82) 

ஃபாலஸ்தீனில் உள்ள சாக்கடல் அதன் அடையாளமாக இன்றும் உள்ளது. அவர்களின் அசிங்கமான செயலை மக்களுள் யாரும் செய்துவிடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையாகத் திகழ்கிறது. 

லூத் (அலை) அவர்களின் சமுதாய மக்களுடைய செயலைப் போன்று யாரேனும் செய்தால் அவ்விருவரையும் கொன்றுவிட வேண்டும் என்பதே இஸ்லாமியச் சட்டமாகும். அது குறித்து நபிமொழியொன்று இவ்வாறு கூறுகின்றது: (இறைத்தூதர்) லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தாரின் (ஈனச்) செயலைச் செய்கின்றவனை நீங்கள் கண்டால் (அவ்வாறு) செய்பவனுக்கும் செய்யப்படுபவனுக்கும் மரண தண்டனை வழங்குங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1376)

ஆசனவாய் என்பது அசிங்கம் வெளியேறும் இடமாகும். அது புணர்வதற்கான துவாரம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் ஆணும் ஆணும்தான் என்றல்ல, கணவன்-மனைவியாக உள்ள ஆண்-பெண் தம்பதியரில், அந்த ஆண் தன் மனைவியின் பெண்குறியில்தான் தனது தேவையைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர மனைவியின் பின்துவாரத்தில் புணரக் கூடாது. இது குறித்தும் நபி (ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.         

“யார் தம் மனைவியின் ஆசனவாயில் புணர வந்தானோ அவன் சபிக்கப்பட்டவன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்:  2162) 

“எம்மனிதன் தன் மனைவியின் ஆசனத் துவாரத்தினுள் பாலியல் உறவு கொண்டானோ அவனை அல்லாஹ் (மறுமையில்) பார்க்கமாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: இப்னுமாஜா: 1913, முஸ்னது அஹ்மத்)

“யார் மாதவிடாய் வரும் நிலையில் (மனைவியோடு) உடலுறவுகொண்டாரோ, அல்லது மனைவியின் பின்துவாரத்தில் புணர்ந்தாரோ, அல்லது குறிசொல்பவனிடம் வந்து, அவன் சொல்வதை உண்மையென நம்பினாரோ அவர், முஹம்மதின்மீது இறக்கியருளப்பட்ட(வேதத்)தை நிராகரித்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள்: இப்னுமாஜா: 631, முஸ்னது அஹ்மத்: 10167, திர்மிதீ: 125)

“பெண்களின் பின்துவாரத்தில் புணராதீர்கள். திண்ணமாக அல்லாஹ் உண்மையைச் சொல்ல வெட்கப்படமாட்டான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ பின் தல்க் (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ: 1084) இவ்வாறு பல்வேறு நபிமொழிகள் பின்துவாரத்தில் புணரும் ஈனச்செயலைக் கண்டிக்கின்றன. 
ஆண்-பெண் தம்பதியருக்கே இத்தகைய நிபந்தனை இருக்கும்போது ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ தன் ஒத்த பாலினத்தோடு புணர்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். லூத் நபி சமுதாயத்தில் ஆணும் ஆணும் புணர்வதுதான் இருந்தது. ஆனால் இக்கலிகாலத்தில் பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழும் ஈனச் செயலும் அரங்கேறுகிறது. காலம் செல்லச் செல்ல மனித அறிவு மழுங்கிக்கொண்டே செல்வதைத்தான் இது காட்டுகிறது.

மதுவை அரசே சட்டப்பூர்வமாக விற்பனை செய்யும்போது அதை வாங்காமல் பயந்துகொண்டிருந்தோருக்குக்கூடத்  துணிச்சலும் தைரியமும் வந்துவிடுகிறது. அதுவரை அச்சத்தோடு தயங்கித் தயங்கி வாங்கிக்கொண்டிருந்தோர் இப்போது தைரியமாக வாங்கத் துணிந்துவிட்டனர். ஆண்கள் மட்டுமே மது அருந்திய காலம் கடந்து, இன்று பெண்களும் மதுவைப் பருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது கட்டற்ற சுதந்திரத்தின் மோசமான விளைவாகும். இவ்வாறு அரசாங்கம் எல்லாத் தீய செயல்களுக்கும் துணைபோனால் சமுதாயம் சீரழிந்துபோகும் என்பது உறுதி.  

அதுபோலவே ஒருபால் உறவு தண்டனைக்குரிய செயல் என்ற சட்டம் இருந்த வரை இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த இச்செயல், இனி கட்டற்ற சுதந்திரத்தின் வாயிலாக எல்லா இடங்களிலும் இது பரவக்கூடிய அபாயம் உள்ளது. ஏனென்றால் சட்ட அனுமதி வழங்கப்பட்டுவிட்டபின் “தவறு செய்கிறோம்” எனும் மனப்பான்மை நீங்கிவிடுவதால், தைரியம் தானாக ஏற்பட்டுவிடுகிறது. மனித மனம் கெட்ட செயலை நோக்கித்தானே விரைவாகப் பாய்கிறது.

இதனால் பெண்களின் நிலை கேள்விக்குறியாகும் அபாயமும் உள்ளது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, காலம் முழுக்க அவளுக்குக் கஞ்சி ஊற்றுவதைவிட, ஒருபால் உறவு மேலானதாயிற்றே! அவனும் சம்பாதிப்பான்; நானும் சம்பாதிப்பேன். அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்வான்; எனது வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்வேன். சம்பாதித்துக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. மனைவி-பிள்ளைகளால் ஏற்படும்  தொல்லையுமில்லை-என்று குயுக்தியால் மனிதன் எண்ணத்  தொடங்கிவிட்டால் பெண்களின் நிலை என்னாகும்?
லூத் (அலை) அவர்களின் வீட்டிற்கு இளைஞர்கள் தோற்றத்தில் வந்திருந்த வானவர்களிடம் தவறாக நடந்துகொள்வதற்காக அவ்வூர் மக்கள் முன்வந்தபோது, இதோ என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றார்கள். அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். அதுவே உங்களுக்குத் தூய்மையானதாகும் என்று அவர்கள் அறிவுரை கூறியபோது, அம்மக்கள் கூறிய பதிலைத் திருக்குர்ஆன் இவ்வாறு பதிவு செய்கிறது:   

“உங்களுடைய பெண்மக்களிடம் எங்களுக்கு யாதொரு தேவையும் இல்லை என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்; நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நிச்சயமாக நீங்கள் நன்கறிவீர்கள்'' என்று கூறினார்கள். (11: 79)

ஆடு, மாடு, நாய் போன்ற எந்த உயிரினமும் செய்யாத ஒருபால் உறவை ஆறறிவு கொண்ட மனிதன் செய்யத் துணிகின்றான் என்றால், அவனுக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவை அவன் பயன்படுத்தவே இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் உள்ள இத்தீய பழக்கத்தை, பண்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் பெயர்போன இந்தியா போன்ற நாடுகளில் செயல்படுத்துவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.  
===========================================







கருத்துகள் இல்லை: