துணைப்பக்கங்கள்
Thursday, January 19, 2012
Wednesday, January 18, 2012
இஸ்லாமிய இல்லறம்
தமிழாக்கம்: நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்.ஃபில்.
திருமணம் என்பது ஒரு மனிதனின் விருப்பத்தை சட்டமுறைப்படி நிறைவேற்றிக் கொள்ளுதல் மட்டுமில்லை. மாறாக ஒருவரின் நற்செயல்களை அதிகப்படுத்திக் கொள்ளவும் வழிவகுக்கிறது. அபூதர்ரு (ரளி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபித்தோழர்களுள் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! பணக்காரர்கள் எல்லாவித நன்மைகளையும் அடைந்து கொள்கின்றார்கள். நாங்கள் தொழுவதைப் போன்று அவர்களும் தொழுகின்றார்கள்; நாங்கள் நோன்பு நோற்பதைப்போல் அவர்களும் நோன்பு நோற்கின்றார்கள்; மேலும், அவர்களின் (உபரியான) செல்வத்திலிருந்து தர்மமும் செய்கின்றார்கள். (எங்களுக்கு அதுபோன்று இல்லையே?)
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஏன், நீங்கள் தர்மமாகக் கொடுப்பதற்கு அல்லாஹ் எதையும் உங்களுக்கு வழங்கவில்லையா? நிச்சயமாக, ஒவ்வொரு தஸ்பீஹும் (சுப்ஹானல்லாஹ் சொல்வது) தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் (அல்லாஹு அக்பர் சொல்வது) தர்மமாகும். ஒவ்வொரு தஹ்லீலும் (லாயிலாஹ இல்லல்லாஹ்’சொல்வது) தர்மமாகும். ஒவ்வொரு தஹ்மீதும் (அல்ஹம்துலில்லாஹ் சொல்வது) தர்மமாகும். நன்மையை ஏவுவதும் தர்மமாகும். தீமையைத் தடுப்பதும் தர்மமாகும். (உன் மனைவியுடன்) உடலுறவு கொள்வதும் தர்மமாகும். அத்தோழர்கள் கேட்டனர்: “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் சுய விருப்பத்தைத் தீர்த்துக் கொள்வதற்கும் நன்மை உண்டா?” அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஒருவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள தடுக்கப்பட்ட (ஹராமான) வழியைக் கையாண்டால் அது அவனுக்குப் பாவம் இல்லையா? என்று மறுவினாத் தொடுத்தார்கள். ”
“ஆம்! நிச்சயமாக!’என்று அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாகச் சொன்னார்கள்: “அவ்வாறே அவன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள ஹலாலான (ஆகுமான) வழியைக் கையாண்டால் அது அவனுக்கு நன்மையாகும்.” பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தர்மங்களை உண்டாக்குகின்ற பல விசயங்களைக் குறிப்பிட்டார்கள். இறுதியாகச் சொன்னார்கள்: இவை அனைத்தையும் முற்பகல் (ளுஹா) தொழுகை உள்ளடக்கியுள்ளது.” (நூல்கள்: முஸ்லிம், அஹ்மது)
அல்பானீ (ரஹ்) இதற்கு விளக்கம் கூறுகிறார்: சுயூத்தி இமாம் அவர்கள், “இத்காருல் அத்கார்” எனும் தம்முடைய நூலில், ஒருவன்(தன் மனைவியுடன்) உடலுறவு கொள்வது தர்மமாகும். அவன் அதுபற்றித் தன் மனதில் எதையும் எண்ணாமல் இருப்பினும் சரியே! ஒவ்வொரு தடவை உடலுறவு கொள்ளும்போதும் இந்நன்மை நிச்சயம் உண்டு என்பதே என் கருத்தாகும். ஆனால், குறைந்தபட்சம், அவன் அவளை மணமுடிக்கின்றபோது அது பற்றிய எண்ணம் அவனுள் இருந்திருக்க வேண்டும். மேலும் அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்’என்று கூறுகின்றார். (நூல்: ஆதாபுஸ்ஸிஃபாப், பக்கம்-138)
இது போன்றதொரு விசயத்தை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர் (ரளி) அறிவிக்கின்றார்கள்: ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நாளும் (ஏதேனும்) ஒரு தர்மம் செய்வது அவசியமாகும்.” இதைக் கேட்ட அபூதர் (ரளி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் எந்தப் பணமும் இல்லாத நிலையில் நான் எப்படி ஒவ்வொரு நாளும் தர்மம் செய்ய முடியும்? என்று வினவினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ஏனெனில் தர்மத்தின் வாசல்கள் பல உள்ளன.
அவை: தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்வது,“சுப்ஹானல்லாஹ் சொல்வது,“அல்ஹம்து லில்லாஹ் சொல்வது,“லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்வது,“அஸ்தஃக்ஃபிருல்லாஹ் சொல்வது, நன்மை செய்வது, தீமையைத் தடுப்பது, மக்கள் நடமாடும் பாதையில் முட்கள், எலும்புகள், கற்கள் ஆகியவற்றை நீக்குவது, பார்வையற்றவருக்கு வழிகாட்டுவது, செவிடர் செவியுறுவதற்கும் ஊமை விளங்குவதற்கும் உதவி செய்வது, ஒருவர் தாம் தொலைத்துவிட்ட பொருளைத் தேடிக் கொண்டிருக்கின்ற போது அவ்விடம் உனக்குத் தெரிந்தால் அவருக்கு அறிவிப்பது, உதவி கேட்டுக் கூக்குரலிடுகின்ற அப்பாவிக்கு உதவி செய்ய ஓடுவது, பலவீனமானவருக்கு, அவரின் பொருளை உன் கரங்களால் தூக்கிவிடுவது, உன் மனைவியுடன் உடலுறவு கொள்வது- இவை அனைத்திற்கும் உனக்கு நன்மை உண்டு. தர்மத்தை உண்டாக்குகின்ற மேற்கூறிய அனைத்தும் உனக்காக நீ சம்பாதிப்பவையாகும்.
இதைச் செவியுற்ற அபூதர் (ரளி) அவர்கள், என் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு எப்படி எனக்கு நன்மை வழங்கப்படும்?’என்று வினவினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: உனக்கொரு குழந்தை இருக்கிறது; (நீ அதை வளர்த்து வருகிறாய்;) அது பருவ வயதடைகிறது; அக்குழந்தையிடமிருந்து நிறைய நன்மைகளை நீ எதிர்பார்க்கிறாய். ஆனால் அது (திடீரென) இறந்துவிட்டது. (அப்போது) நீ அதற்காக நன்மையைக் கேட்பாயா? (என்று வினவினார்கள்.) ஆம்!’என அபூதர் (ரளி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அப்போது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நீ அந்தக் குழந்தையைப் படைத்தாயா? என்று வினவினார்கள். இல்லை! அல்லாஹ்தான் அதைப் படைத்தான்’என்று கூறினார்கள். நீ அக்குழந்தைக்கு நல்வழி காட்டினாயா?’என்று வினவினார்கள். “இல்லை! அல்லாஹ்தான் நல்வழிகாட்டினான் என்று கூறினார்கள். “நீ அக்குழந்தைக்கு உணவு கொடுத்தாயா? என்று மீண்டும் வினவினார்கள். இல்லை! அல்லாஹ்தான் உணவு கொடுத்தான் என்று பதிலளித்தார்கள். பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அவ்வாறே, உன் விதையை அனுமதிக்கப்பட்ட இடத்தில் (உன் மனைவியிடம்)வை. தடுக்கப்பட்ட இடத்தை விட்டு (விபசாரம்) தவிர்ந்து கொள். பிறகு அல்லாஹ் நாடினால் அதற்கு உயிர் கொடுப்பான்; மேலும், அவன் நாடினால் அதை மரணிக்கச் செய்வான். (இவ்விரு நிலைகளிலும்) நீ நன்மை வழங்கப்படுவாய். (நூல்கள் :இப்னு ஹிப்பான், நசயீ)
-இஸ்லாமிய இல்லறம் எனும் நூலிலிருந்து.
Tuesday, December 20, 2011
சமய நல்லிணக்க கிறிஸ்துமஸ் பெருவிழா
![]() |
| அழைப்பிதழில் என் பெயர் இடம்பெற்றுள்ளது. |
Friday, December 16, 2011
திரைப்படங்களும் முஸ்லிம்களும்
‘முஸ்லிம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே ஓர் ஒவ்வாமை நிலையை உருவாக்கப் பல்வேறு கோணங்களில் தீய சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. “அவன் கெட்டவன்”, “நாட்டுக்கு விரோதி”, “தேசத் துரோகி” என்ற மனப்பான்மையை மக்கள் மனங்களில் பதிய வைக்க அவை போட்டிபோடுகின்றன.
மக்களை வெகுவாகச் சென்றடையக்கூடியதும் அவர்களை எளிதில் கவரக்கூடியதும் திரைப்படம். அதைக் கேளிக்கையாகப் பார்த்து, விளையாட்டாக விட்டுவிடக்கூடிய நிலையில் உருவாகி வந்த திரைப்படங்கள் இன்று முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குவதற்காகவும் அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என்ற பொய்யான கருத்தாக்கத்தை ஏற்படுத்தவுமே தயாரிக்கப்படுகின்றன.
தமிழக மக்களைப் பொறுத்தவரை, எதன்மூலமும் சாதிக்க முடியாததைத் திரைப்படத்தின் வாயிலாகச் சாதித்துவிடலாம். இந்தத் தமிழகத்தை இதுவரை ஆண்டவர்கள், மக்கள் சேவை செய்வதைப் போன்ற திரைப்படக் காட்சிகளால் மக்களைக் கவர்ந்ததாலேயே ஆட்சிக்கு வந்தார்கள். அத்தகைய மாபெரும் மாற்றத்தைத் திரைப்படங்கள் செய்துவருகின்றன.
ஆகவேதான் முஸ்லிம்களுக்கு எதிரான தீயசக்திகள் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகக் காட்டத் திரைப்படத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திவருகின்றார்கள். முஸ்லிம்கள் திரைப்படத்துறையைக் கையிலெடுக்கமாட்டார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டுதான் அவர்கள் மிகத் துணிவோடு இவ்வழியைக் கையாள்கிறார்கள்.
ரோஜா எனும் திரைப்படம் முதல் பம்பாய் எனும் திரைப்படம் வரை எடுத்தவர்கள், தொடர்ந்து அவ்வப்போது முஸ்லிம் பெயர்கள் தாங்கிய கதாபாத்திரங்களைத் தேசத்துரோகிகளாகக் காட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். குண்டு வைப்பவர்களும், தேசத்தைக் காட்டிக்கொடுப்பவர்களும் முஸ்லிம் கதாபாத்திரங்கள். அவர்களைக் காப்பாற்றப் போராடுபவர்களும், அதற்காக முயற்சிசெய்பவர்களும் இந்துக் கதாபாத்திரங்கள். இப்படிப்பட்ட திரைப்படங்கள் அன்று முதல் இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் இதுவரை முன்வரவில்லை. அதற்கான வழியையும் இதுவரை நம்முள் யாரும் யோசிக்கவும் இல்லை.
அண்மையில் வெளிவந்துள்ள இரண்டு திரைப்படங்கள் அத்தகைய திரைப்படங்களே. வானம் எனும் திரைப்படம் ஐந்து கதைக்கருவைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று இளவயதில் வீட்டைவிட்டுச் சென்றவன் தீவிரவாதக் கும்பலுடன் சேர்ந்து சமூக விரோதியாக மாறுவதாகச் கதை அமைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது முஸ்லிமை (அண்ணன்) வீண் வம்புக்கிழுத்து இந்துக்கள் அடிக்கின்றபோது, அதைத் தடுக்கத் தம்பி ஓடி வருகிறான். இருவரையும் அவர்கள் கண்டபடி தாக்குகின்றபோது, ஒரு காவலர் வந்து அதைத் தடுத்து அனுப்பி வைப்பதாகக் காட்சி அமைந்துள்ளது. அதில் மனமுடைந்த தம்பி வீட்டைவிட்டே சென்றுவிடுகிறான். அவனைத் தேடித்தான் அண்ணன் சென்னைக்குச் செல்கிறான்.
அங்கு அவன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுகிறான். அங்கு ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு இருக்கின்ற முஸ்லிம் கதாபாத்திரங்கள் தீவிரவாதிகளாகக் காட்டப்படுகின்றனர். அவர்களுள் ஒருவன், “அழுதுகொண்டே இருக்கக்கூடாது. அழ வைக்கணும். மற்ற இடங்களில் குண்டு வைத்தால் மருத்துவமனைகளில் வந்து பிழைத்துக்கொள்வார்கள். மருத்துவமனையிலேயே குண்டு வைத்தால் யாரும் பிழைக்க முடியாது” என்று கூறுகிறான். ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் சொல்வதாக அமைந்துள்ள இந்தக் காட்சி முற்றிலும் அப்பட்டமானது. எந்த முஸ்லிமுடைய சிந்தனையிலும் தோன்றாதது. இப்படிக் குரூரமாகச் சிந்தித்து, அதை முஸ்லிம் கதாபாத்திரம் பேசுவதாகக் கதை அமைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இறுதியில், காணாமல் போன தம்பியைத் தேடிச் சென்ற முஸ்லிம் கதாபாத்திரம் குர்ஆனைக் கையில் பிடித்துக்கொண்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கின்ற தீவிரவாதிகளைப் பார்த்து, “அல்முஸ்லிமு மன் சலிமல் முஸ்லிமூன மின் லிசானிஹி வயதிஹி” (தம் நாவாலும் கையாலும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப்பெற்றவர்களாக இருக்கக் காரணமானவரே உண்மையான முஸ்லிம்) என்ற நபிமொழியையும், “லைசஷ் ஷதீதுல்லதீ யக்த்துலு...” (போர்க்களத்தில் எதிரிகளை வெட்டுபவன் வீரன் அல்லன். மாறாக, தம் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே வீரன்) என்ற நபிமொழியையும் உரத்து உச்சரிக்கிறது.
முஸ்லிம் சமுதாயம் படித்துவருகின்ற நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளை அவர்களுக்கே எடுத்துக்காட்டுகின்றார்களா? அல்லது அதையெல்லாம் அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு ஞாபகப்படுத்த முனைகின்றார்களா?ஆக, இதில் “முஸ்லிம்கள் தீவிரவாதிகள்” என்று அப்பட்டமாகக் காட்டத் தவறவில்லை.
இரண்டாவது திரைப்படம் வேலாயுதம். பேரைக் கேட்டாலே அதில் எந்த அளவு இந்துத்துவம் உள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். இந்தத் திரைப்படத்தின் தொடக்கமே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில்தான். அங்கே ஒரு முஸ்லிம் பெரியவர், உர்தூ மொழியில் பேச, அதை மற்றொருவர் தமிழாக்கம் செய்கிறார். “இந்தியாவின் அமைதியைக் கெடுக்க வேண்டும். அதற்குச் சென்னையில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்க வேண்டும்.”
அந்தத் தீவிரவாதக் குழுவுக்குத் தமிழக உள்துறை அமைச்சர் விலைபோகிறார். இப்படித் தொடங்குகின்ற இந்தத் திரைப்படத்தில், அவ்வப்போது குண்டுகள் வெடிக்கின்றன. வேலாயுதம் எனும் பெயரில் கதாநாயகன் அதைத் தடுக்கிறார். அவர் எதார்த்தமாகச் செய்வது மக்களுக்கு நன்மையாக ஆகிவிடுகிறது. எனவே மக்கள் மத்தியில் “வேலாயுதம் காப்பாற்றுவார்” எனும் நம்பிக்கை வளர்ந்துவருகிறது. இறுதியில் அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிய பாகிஸ்தான்காரன் ஜிஹாத் என்று சொல்லிக்கொண்டு வருகிறான்.
வேலாயுதத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்போவதாக உள்துறை அமைச்சர் கூற, அதைக் கேட்டு ஆவலோடு மக்கள் திரண்டு வருகின்றனர். மக்கள் நிறைந்துள்ள அத்திடலைச் சுற்றி குண்டுகளை வைத்துத் தகர்க்க எதிரி திட்டமிடுகிறான். “நான்தான் வேலாயுதம்” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தும்போது அவனது பொய்முகம் கிழிகிறது. அப்போது அவன், “இந்தத் திடலைச் சுற்றிக் குண்டு வைத்துள்ளோம். யாரும் இங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது” என்று அறைகூவல் விடுக்கும்போது, உண்மையான வேலாயுதம் அதை முறியடித்து, மக்களைக் காப்பாற்றி, சில வசனங்களைப் பேசுகிறார். ஒவ்வொருவரும் வேலாயுதமாக மாறவேண்டும் என்று துணிவை வரவழைக்கிறார்.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரானதாகும். இப்படத்தில் பாகிஸ்தான் முஸ்லிம்களைக் காட்டினாலும், அது முஸ்லிம்கள் என்ற பொதுவான பார்வையைத்தான் குறிக்குமே தவிர பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய இத்திரைப்படத்துக்கு நம் சமுதாயத்தில் யாரும் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே “முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்” என்பதைத் தீயசக்திகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
“இத்திரைப்படத்தில் வருகின்ற கதை, காட்சிகள், வசனங்கள் யாவும் கற்பனையே. இவை யாரையும், எதையும் குறிப்பிடுவன அல்ல” என்று திரைப்படம் தொடங்குமுன்னரே குறிப்பிட வேண்டும். இது திரைப்படத்தின் விதிகளுள் ஒன்றாகும். மேற்கூறப்பட்ட இரண்டு திரைப்படங்களிலும் அந்த வாசகம் இடம்பெறவே இல்லை.
ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகவும் சமூக விரோதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கற்பனை செய்து காட்டுவது நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு கோணங்களில் முஸ்லிம்கள் சிரமத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற போக்கு காணப்படுகிறது. இதனால் வீடு வாடகைக்குப் பெறுவதுகூட மிகச்சிரமமாக உள்ளது.
இதைக் களைய நாம் செய்ய வேண்டியதென்ன? நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதோ, அதேபோல் திரைப்படம் எடுப்பதோ இல்லை. மாறாக, கதாசிரியர்களையும் தயாரிப்பாளர்களையும் நம்முள் ஒரு குழு சந்திக்க வேண்டும். அதுவே இஸ்லாமிய அழைப்புப் பணிக்குழு. அக்குழு நேரடியாக அவர்களைச் சந்தித்து, இஸ்லாம் என்ன சொல்கிறது; அது எதை நோக்கி அழைக்கிறது; திருக்குர்ஆனில் என்ன உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. திருக்குறளின் கூற்றுகள் பதிந்துள்ள அளவுக்குத் திருக்குர்ஆனின் கூற்றுகள் மனித நெஞ்சங்களில் பதியவில்லையே ஏன்? அதைப் புனிதமாகக் கருதி, அது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஒதுக்கி வைத்ததால்தான் நம்முள் பலருக்கு அதன் அர்த்தம்கூடத் தெரியவில்லை. நமக்கே அதைப் பற்றி முழுமையாகத் தெரியாதபோது, பிறருக்கு எப்படித் தெரியும்?
எனவே திருக்குர்ஆனின் கூற்றுகளை மற்றவர்களுக்கு எடுத்துரைப்போம்! அதன் கருத்துகளைப் பல்வேறு கோணங்களில் பரப்புரை செய்வோம்! திண்ணமாக, காலப்போக்கில் ‘முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்; அவர்கள் நம்முடைய நண்பர்கள்’ எனும் உண்மை உலகுக்குப் புரியும். அந்த நிலை இன்ஷா அல்லாஹ் கூடியவிரைவில் வரும். அதற்காகப் பாடுபட நாம் யாவரும் நம்மால் இயன்ற அளவு முனைவோம்!
மக்களை வெகுவாகச் சென்றடையக்கூடியதும் அவர்களை எளிதில் கவரக்கூடியதும் திரைப்படம். அதைக் கேளிக்கையாகப் பார்த்து, விளையாட்டாக விட்டுவிடக்கூடிய நிலையில் உருவாகி வந்த திரைப்படங்கள் இன்று முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்குவதற்காகவும் அவர்கள் கெட்டவர்கள், தீவிரவாதிகள் என்ற பொய்யான கருத்தாக்கத்தை ஏற்படுத்தவுமே தயாரிக்கப்படுகின்றன.
தமிழக மக்களைப் பொறுத்தவரை, எதன்மூலமும் சாதிக்க முடியாததைத் திரைப்படத்தின் வாயிலாகச் சாதித்துவிடலாம். இந்தத் தமிழகத்தை இதுவரை ஆண்டவர்கள், மக்கள் சேவை செய்வதைப் போன்ற திரைப்படக் காட்சிகளால் மக்களைக் கவர்ந்ததாலேயே ஆட்சிக்கு வந்தார்கள். அத்தகைய மாபெரும் மாற்றத்தைத் திரைப்படங்கள் செய்துவருகின்றன.
ஆகவேதான் முஸ்லிம்களுக்கு எதிரான தீயசக்திகள் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகக் காட்டத் திரைப்படத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்திவருகின்றார்கள். முஸ்லிம்கள் திரைப்படத்துறையைக் கையிலெடுக்கமாட்டார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டுதான் அவர்கள் மிகத் துணிவோடு இவ்வழியைக் கையாள்கிறார்கள்.
ரோஜா எனும் திரைப்படம் முதல் பம்பாய் எனும் திரைப்படம் வரை எடுத்தவர்கள், தொடர்ந்து அவ்வப்போது முஸ்லிம் பெயர்கள் தாங்கிய கதாபாத்திரங்களைத் தேசத்துரோகிகளாகக் காட்டிக்கொண்டே இருக்கின்றார்கள். குண்டு வைப்பவர்களும், தேசத்தைக் காட்டிக்கொடுப்பவர்களும் முஸ்லிம் கதாபாத்திரங்கள். அவர்களைக் காப்பாற்றப் போராடுபவர்களும், அதற்காக முயற்சிசெய்பவர்களும் இந்துக் கதாபாத்திரங்கள். இப்படிப்பட்ட திரைப்படங்கள் அன்று முதல் இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் இதுவரை முன்வரவில்லை. அதற்கான வழியையும் இதுவரை நம்முள் யாரும் யோசிக்கவும் இல்லை.
அண்மையில் வெளிவந்துள்ள இரண்டு திரைப்படங்கள் அத்தகைய திரைப்படங்களே. வானம் எனும் திரைப்படம் ஐந்து கதைக்கருவைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று இளவயதில் வீட்டைவிட்டுச் சென்றவன் தீவிரவாதக் கும்பலுடன் சேர்ந்து சமூக விரோதியாக மாறுவதாகச் கதை அமைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது முஸ்லிமை (அண்ணன்) வீண் வம்புக்கிழுத்து இந்துக்கள் அடிக்கின்றபோது, அதைத் தடுக்கத் தம்பி ஓடி வருகிறான். இருவரையும் அவர்கள் கண்டபடி தாக்குகின்றபோது, ஒரு காவலர் வந்து அதைத் தடுத்து அனுப்பி வைப்பதாகக் காட்சி அமைந்துள்ளது. அதில் மனமுடைந்த தம்பி வீட்டைவிட்டே சென்றுவிடுகிறான். அவனைத் தேடித்தான் அண்ணன் சென்னைக்குச் செல்கிறான்.
அங்கு அவன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுகிறான். அங்கு ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு இருக்கின்ற முஸ்லிம் கதாபாத்திரங்கள் தீவிரவாதிகளாகக் காட்டப்படுகின்றனர். அவர்களுள் ஒருவன், “அழுதுகொண்டே இருக்கக்கூடாது. அழ வைக்கணும். மற்ற இடங்களில் குண்டு வைத்தால் மருத்துவமனைகளில் வந்து பிழைத்துக்கொள்வார்கள். மருத்துவமனையிலேயே குண்டு வைத்தால் யாரும் பிழைக்க முடியாது” என்று கூறுகிறான். ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் சொல்வதாக அமைந்துள்ள இந்தக் காட்சி முற்றிலும் அப்பட்டமானது. எந்த முஸ்லிமுடைய சிந்தனையிலும் தோன்றாதது. இப்படிக் குரூரமாகச் சிந்தித்து, அதை முஸ்லிம் கதாபாத்திரம் பேசுவதாகக் கதை அமைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இறுதியில், காணாமல் போன தம்பியைத் தேடிச் சென்ற முஸ்லிம் கதாபாத்திரம் குர்ஆனைக் கையில் பிடித்துக்கொண்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருக்கின்ற தீவிரவாதிகளைப் பார்த்து, “அல்முஸ்லிமு மன் சலிமல் முஸ்லிமூன மின் லிசானிஹி வயதிஹி” (தம் நாவாலும் கையாலும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப்பெற்றவர்களாக இருக்கக் காரணமானவரே உண்மையான முஸ்லிம்) என்ற நபிமொழியையும், “லைசஷ் ஷதீதுல்லதீ யக்த்துலு...” (போர்க்களத்தில் எதிரிகளை வெட்டுபவன் வீரன் அல்லன். மாறாக, தம் கோபத்தைக் கட்டுப்படுத்துபவனே வீரன்) என்ற நபிமொழியையும் உரத்து உச்சரிக்கிறது.
முஸ்லிம் சமுதாயம் படித்துவருகின்ற நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளை அவர்களுக்கே எடுத்துக்காட்டுகின்றார்களா? அல்லது அதையெல்லாம் அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு ஞாபகப்படுத்த முனைகின்றார்களா?ஆக, இதில் “முஸ்லிம்கள் தீவிரவாதிகள்” என்று அப்பட்டமாகக் காட்டத் தவறவில்லை.
இரண்டாவது திரைப்படம் வேலாயுதம். பேரைக் கேட்டாலே அதில் எந்த அளவு இந்துத்துவம் உள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். இந்தத் திரைப்படத்தின் தொடக்கமே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில்தான். அங்கே ஒரு முஸ்லிம் பெரியவர், உர்தூ மொழியில் பேச, அதை மற்றொருவர் தமிழாக்கம் செய்கிறார். “இந்தியாவின் அமைதியைக் கெடுக்க வேண்டும். அதற்குச் சென்னையில் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்க வேண்டும்.”
அந்தத் தீவிரவாதக் குழுவுக்குத் தமிழக உள்துறை அமைச்சர் விலைபோகிறார். இப்படித் தொடங்குகின்ற இந்தத் திரைப்படத்தில், அவ்வப்போது குண்டுகள் வெடிக்கின்றன. வேலாயுதம் எனும் பெயரில் கதாநாயகன் அதைத் தடுக்கிறார். அவர் எதார்த்தமாகச் செய்வது மக்களுக்கு நன்மையாக ஆகிவிடுகிறது. எனவே மக்கள் மத்தியில் “வேலாயுதம் காப்பாற்றுவார்” எனும் நம்பிக்கை வளர்ந்துவருகிறது. இறுதியில் அந்த நம்பிக்கையைத் தகர்த்தெறிய பாகிஸ்தான்காரன் ஜிஹாத் என்று சொல்லிக்கொண்டு வருகிறான்.
வேலாயுதத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்போவதாக உள்துறை அமைச்சர் கூற, அதைக் கேட்டு ஆவலோடு மக்கள் திரண்டு வருகின்றனர். மக்கள் நிறைந்துள்ள அத்திடலைச் சுற்றி குண்டுகளை வைத்துத் தகர்க்க எதிரி திட்டமிடுகிறான். “நான்தான் வேலாயுதம்” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்தும்போது அவனது பொய்முகம் கிழிகிறது. அப்போது அவன், “இந்தத் திடலைச் சுற்றிக் குண்டு வைத்துள்ளோம். யாரும் இங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது” என்று அறைகூவல் விடுக்கும்போது, உண்மையான வேலாயுதம் அதை முறியடித்து, மக்களைக் காப்பாற்றி, சில வசனங்களைப் பேசுகிறார். ஒவ்வொருவரும் வேலாயுதமாக மாறவேண்டும் என்று துணிவை வரவழைக்கிறார்.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரானதாகும். இப்படத்தில் பாகிஸ்தான் முஸ்லிம்களைக் காட்டினாலும், அது முஸ்லிம்கள் என்ற பொதுவான பார்வையைத்தான் குறிக்குமே தவிர பிரித்துப் பார்க்க முடியாது. இத்தகைய இத்திரைப்படத்துக்கு நம் சமுதாயத்தில் யாரும் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே “முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்” என்பதைத் தீயசக்திகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
“இத்திரைப்படத்தில் வருகின்ற கதை, காட்சிகள், வசனங்கள் யாவும் கற்பனையே. இவை யாரையும், எதையும் குறிப்பிடுவன அல்ல” என்று திரைப்படம் தொடங்குமுன்னரே குறிப்பிட வேண்டும். இது திரைப்படத்தின் விதிகளுள் ஒன்றாகும். மேற்கூறப்பட்ட இரண்டு திரைப்படங்களிலும் அந்த வாசகம் இடம்பெறவே இல்லை.
ஊடகங்கள் மூலம் முஸ்லிம்களைக் கெட்டவர்களாகவும் சமூக விரோதிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கற்பனை செய்து காட்டுவது நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு கோணங்களில் முஸ்லிம்கள் சிரமத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற போக்கு காணப்படுகிறது. இதனால் வீடு வாடகைக்குப் பெறுவதுகூட மிகச்சிரமமாக உள்ளது.
இதைக் களைய நாம் செய்ய வேண்டியதென்ன? நம்முடைய எதிர்ப்பைக் காட்டுவதோ, அதேபோல் திரைப்படம் எடுப்பதோ இல்லை. மாறாக, கதாசிரியர்களையும் தயாரிப்பாளர்களையும் நம்முள் ஒரு குழு சந்திக்க வேண்டும். அதுவே இஸ்லாமிய அழைப்புப் பணிக்குழு. அக்குழு நேரடியாக அவர்களைச் சந்தித்து, இஸ்லாம் என்ன சொல்கிறது; அது எதை நோக்கி அழைக்கிறது; திருக்குர்ஆனில் என்ன உள்ளது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இதுவே நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. திருக்குறளின் கூற்றுகள் பதிந்துள்ள அளவுக்குத் திருக்குர்ஆனின் கூற்றுகள் மனித நெஞ்சங்களில் பதியவில்லையே ஏன்? அதைப் புனிதமாகக் கருதி, அது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று ஒதுக்கி வைத்ததால்தான் நம்முள் பலருக்கு அதன் அர்த்தம்கூடத் தெரியவில்லை. நமக்கே அதைப் பற்றி முழுமையாகத் தெரியாதபோது, பிறருக்கு எப்படித் தெரியும்?
எனவே திருக்குர்ஆனின் கூற்றுகளை மற்றவர்களுக்கு எடுத்துரைப்போம்! அதன் கருத்துகளைப் பல்வேறு கோணங்களில் பரப்புரை செய்வோம்! திண்ணமாக, காலப்போக்கில் ‘முஸ்லிம்கள் சாந்தமானவர்கள்; அவர்கள் நம்முடைய நண்பர்கள்’ எனும் உண்மை உலகுக்குப் புரியும். அந்த நிலை இன்ஷா அல்லாஹ் கூடியவிரைவில் வரும். அதற்காகப் பாடுபட நாம் யாவரும் நம்மால் இயன்ற அளவு முனைவோம்!
Labels:
திரைப்படங்கள்,
தீவிரவாதிகள்
Wednesday, November 16, 2011
Friday, October 28, 2011
பீ.எஸ். பீ.ஜைனுல் ஆபிதீன் பாகவி - ஜும்ஆ உரை
இன்றைக்கு (28/10/2011) என்னுடைய பேராசிரியர் மௌலவி பீ.எஸ். பீ.ஜைனுல் ஆபிதீன் பாகவி அவர்கள் நுங்கம்பாக்கம் ஜும்ஆ மஸ்ஜிதில் ஆற்றிய உரையின் சுருக்கம்:
மனிதர்கள் தத்தம் அறிவுக்கேற்பச் செயல்படுவது மார்க்கம் இல்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதைக் கட்டளையிட்டிருக்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுச் செயல்படுவதே மார்க்கம் ஆகும்.
ஒருவர் தொழுகாமல் பல இலட்சம் தர்மம் செய்தாலும் கடமையான இரண்டு ரக்அத்தின் நன்மையை அதில் பெற்றுக்கொள்ளவே முடியாது.
ஒருவர் கடமையான நோன்பு நோற்காமல், பிறகு ஆயிரம் நாள் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது.
அதுபோல் குர்பானி நாளில் குர்பானி கொடுக்காமல் அதற்குப் பகரமாக பல்லாயிரம் ரூபாயை ஏழைகளுக்குத் தானமாக வழங்கினாலும் அந்தத் தியாகத்தின் நன்மையை அடைய முடியாது.
எனவே சில அறிவிலிகள் கூறுவதைப்போல் நீங்கள் செயல்படக்கூடாது. பக்ரீத் பெருநாளில் ஒரேநேரத்தில் பல்லாயிரம் ஆடு, மாடுகள் அறுக்கப் படுகின்றன. அதற்குப் பதிலாக அதைப் பணமாக ஏழைகளுக்குக் கொடுத்தால் அவர்கள் பயன்பெறுவார்களே. இது கேட்க நன்றாக இருக்கலாம். ஆனால் ஆட்டை அறுத்து அதில் வெளிப்படுகின்ற தியாகம் மற்ற எதிலும் நாம் பெறவே முடியாது.
ஒவ்வொரு வணக்கத்திலும் ஒரு தத்துவம் உள்ளது. அதை அந்தந்த வணக்கத்தில்தான் பெறமுடியும்.
தொழுகையில் நாம் நம்முடைய அடிமைத்தனத்தை அல்லாஹ்வுக்குச் சமர்ப்பிக்கிறோம்.
நோன்பில் நம்முடைய பொறுமையை, சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறோம்.
ஸகாத் - கொடுக்கும் தன்மையை நம்மில் வளர்க்கிறது.
ஹஜ்- விட்டுக்கொடுப்பதை வளர்க்கிறது.
இப்படி ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தைக் கூறுகிறது.
எனவே நாம் இந்த பக்ரீத் பெருநாளில் ஆடு, மாடுகளை அறுத்துப் பலியிட்டு அல்லாஹ்விடம் முழுமையான நற்கூலியைப் பெறுவோம்.
கேட்டவர்: மாணவர் நூ. அப்துல் ஹாதி பாகவி
Labels:
ஜும்ஆ உரை,
பீ.எஸ். பீ.ஜைனுல் ஆபிதீன் பாகவி
Tuesday, September 13, 2011
இமாம்கள் எழுதியவை கற்பனையா?
இமாம்கள் எழுதி வைத்தவையெல்லாம் கற்பனை என்று கூறுபவர்கள் இன்று (13\09\2011) தினகரனில் வெளிவந்துள்ள செய்தியைப் படித்துப் பார்க்கட்டும்.
வடமாநில வாலிபர்களுக்கு தர்மஅடி
மாட்டுடன் சில்மிஷத்துக்கு முயற்சி
கோவை, செப். 13:
மாட்டுடன் சில்மிஷத்துக்கு முயற்சி செய்த 4 வடமாநில வாலிபர்களை கிராமத்தினர் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையத்தில் சிமென்ட் கலவை தயாரிக்கும் தனியார் ஆலை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த தொழிற்சாலையில் வேலை செய்யும் 4 வாலிபர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புகுந்தனர். அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டுடன் செக்ஸ் உறவு கொள்ள முயற்சி செய்தனர். அப்போது மாடு கத்தியுள்ளது. மாட்டின் சத்தம் கேட்டு யாரும் வந்துவிடுவார்கள் என, அதன் நாக்கை துண்டாக அறுத்தனர். ரத்தம் சிந்திய நிலையில் துடித்த மாடு, பயங்கர சத்தத்தில் அலறித்துடித்தது. அதைக் கேட்டு தோட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்களை பார்த்ததும் நான்கு பேரும் தப்பிஓடினர். ஆனால் கிராம மக்கள் உதவியுடன் தோட்டக்காரர்கள் அவர்களை துரத்திப் பிடித்து, தென்னை மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். காலை 8 மணிவரை போலீசார் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நால்வரையும் கயிற்றால் கட்டி இழுத்துக்கொண்டு போத்தனூர் ஓராட்டுக்குப்பை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொது மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதியம் 1 மணிக்கு நால்வரையும் மீட்டனர்.
விசாரணையில் அவர்கள் ஒரிசாவைச் சேர்ந்த வினோத்(19), நிஸ்தார்(18), டேவிட்(20), பெகோர்(22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். நாக்கு அறுக்கப்பட்ட மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது உயிர்பிழைப்பது சந்தேகம்தான் என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
| மாட்டுடன் உறவு கொள்ள முயன்றபோது கதறியதால் நாக்கை அறுத்த வடமாநில வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். |
![]() |
| நாக்கு அறுபட்ட மாடு |
.
Saturday, September 3, 2011
இஸ்லாத்தைத் துறந்துவிட்டாள்!
அண்மையில் ஒரு சோகமான நிகழ்ச்சி நடைபெற்றது. அதைப் பகிர்ந்துகொள்ளவே இக்கட்டுரையை வரைகிறேன். பராஅத் என்றால் பாவத்திலிருந்து விடுதலை பெறுதல் என்று பொருள். அந்த நாளில் ஒருத்தி, தாய் மார்க்கமாம் இஸ்லாத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டாள். ஆம், இஸ்லாத்தைத் துறந்துவிட்டாள். விடுதலை பெற்றுவிட்டாள் என்று சொல்வதைவிட குஃப்ர் என்று நரகச் சிறைக்குள் விழுந்துவிடத் துணிந்துவிட்டாள் என்றுதான் கூறவேண்டும்.
அவளுடைய தந்தை ஒரு பள்ளிவாசலின் செயலாளர் என்பது மிகவும் வியப்புக்குரியது. ஆம், அவளுடைய தந்தைக்கு அவளுடன் சேர்த்து நான்கு பெண்பிள்ளைகள். அவள் மூன்றாமவள். அவளுடைய தந்தை, வீட்டில் தம் பிள்ளைகளையோ, மனைவியையோ தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவில்லை. தம் பெண் பிள்ளைகளைக் கண்டித்து வளர்க்கவில்லை. இஸ்லாத்தைப் போதிக்கவில்லை. மாறாக, அவர் கண்டித்ததெல்லாம், பள்ளிவாசலில் அமைதியாக மார்க்கப் பணியாற்றும் ஆலிம்களைத்தான். அப்பள்ளியில் அவரால் பாதிக்கப்பட்ட மார்க்க அறிஞர்கள் பலர் உள்ளனர். ஒவ்வொருவரும் தம் மனம் வேதனைப்பட்டுத்தான் அந்தப் பள்ளிவாசலில் இருந்து வெளியேறினர். வெளியேற்றப்பட்டனர்.
அந்தப் பள்ளிவாசலில் மார்க்கப் பணியாற்றிய ஆலிம்கள் பலர், அவர்கள் பணியாற்றிய காலத்தில் அற்ப காரணங்களுக்காக அவ்வப்போது அவரால் கண்டிக்கப்பட்டனர், எச்சரிக்கப்பட்டனர். அந்தப் பள்ளியில் பணியாற்றும் முஅத்தின்கள்தாம் அவர் வீட்டின் பணியாளர்கள். பள்ளிவாசலின் பணத்தைத் தம் சொந்தப் பணமாகக் கருதித் தாராளமாகப் பயன்படுத்துவார். வெள்ளிக்கிழமை தவிர பள்ளிக்குத் தொழ வரமாட்டார். அப்படியே வந்தாலும் அங்குள்ளவர்களைக் கண்டிக்காமல் செல்லமாட்டார். அப்படிப்பட்ட ஒரு பள்ளிவாசல் செயலாளரின் மகள்தான் இன்று இஸ்லாத்தையே தூக்கியெறிந்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
பள்ளிவாசல் நிர்வாகம்
பள்ளிவாசல் நிர்வாகம் யார் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: யார் அல்லாஹ்வின்மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தை வழங்கிவருவதுடன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அஞ்சவில்லையோ அவர்கள்தாம் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களைப் பராமரிப்பார்கள். அவர்களே நல்வழி பெற்றவர்களுள் அடங்குவர். (09: 18)
இன்று இத்தகையோர்தாம் பள்ளிவாசலை நிர்வாகம் செய்கின்றார்களா? சரி, அத்தகைய தகுதிகளைக் கொண்டிராவிட்டாலும், மார்க்கப் பணியாற்றுகின்ற மார்க்க அறிஞர்களையாவது சீண்டாமல் இருக்க வேண்டுமல்லவா? அவ்வப்போது சீண்டுவதையும், அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதையுமே தம் தொழிலாகக் கொண்டுள்ளனர் பலர். அவர்களும் மனிதர்கள்தாமே? சின்னச் சின்ன சறுகுதல்களும், பிழைகளும் இருக்கத்தான் செய்யும். அதற்காக, அதையே மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் உள்ளது?
ஒரு தந்தை தம் பெண் பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளாமலே பலர் தந்தைகளாக உள்ளனர். தொடக்கத்திலேயே இஸ்லாமிய மார்க்கப் போதனைகளை ஊட்டி வளர்க்க வேண்டும். பணிவு என்னும் நற்பழக்கத்தைப் போதிக்க வேண்டும். பருவ வயதை அடைந்தவுடன் அந்நிய ஆண்களின் முகம் பாராமல் இருக்கவும், தேவையில்லாமல் அந்நிய ஆடவருடன் பேசாமல் இருக்கவும் போதிக்க வேண்டும். பர்தா எனும் பாதுகாப்புக் கவசத்தைக் கட்டாயமாக அணியப் பழக்க வேண்டும். இப்படிப் பற்பல ஒழுக்கங்களையும் நன்னடத்தைகளையும் போதிக்க வேண்டும். அதன்பின் அவர்களுக்குப் பருவ வயது வந்ததும் தாமதிக்காமல், தகுந்த மணாளனைப் பார்த்து மணமுடித்துக்கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான், அப்பெண் நாளை மறுமையில் பெற்றோருக்கு நரகத்தைவிட்டுக் காக்கும் திரையாக ஆவாள் என்பதை நினைவில் கொள்க.
பொதுச் சொத்தை அபகரித்தல்
பொதுவாக, பொருட்செல்வத்துக்கு அடிமையாகாமல் ஒருவர் தம்மைக் காத்துக்கொள்வது மிகவும் சிரமம். அதற்கு அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது அதனினும் கடினம். அதனால்தான் பொருளைக் கையாள்கின்ற பொறுப்புக்கு இறையச்சமுடையோர் முன்வருவதில்லை. ஏனெனில் அது நல்லவனையும் கெட்டவனாக்கிவிடும் என்பது நியதி. பிறர் பொருளை அபகரித்தல் மிகப்பெரும் குற்றம் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில் பொதுச்சொத்தை அபகரித்தல், அதை முறைகேடாகப் பயன்படுத்துதல் அதைவிடப் பெருங்குற்றம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அல்லாஹ் அதற்கு எத்தகைய தண்டனையைக் கொடுப்பான் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியாது. இதுதான் அதற்குரிய தண்டனை என்பதை நாம் கணிக்கவும் முடியாது. எனவே இது விசயத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பதே இம்மைக்கும் மறுமைக்கும் நலன் பயக்கும்.
படிப்பினைகள்
1. ஆர்.எஸ்.எஸ். கயவர்களின் சூழ்ச்சி வலை நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது என்பதை நாம் இன்னும் உணராமல் இருக்கிறோம். அவர்களுடைய சூழ்ச்சிகள் பலவற்றுள் இதுவும் ஒன்று. அதை முறியடிக்க நாம் மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டியது அவசியமாகும்.
2. ஒரு தந்தை தம் பெண்பிள்ளைகளை இஸ்லாமியக் கலாச்சாரப் பண்பாடுகளோடு வளர்த்து உரிய பருவத்தில் அவர்களுக்கு மணமுடித்துக்கொடுக்க வேண்டும். இப்பொறுப்பை முதுகுக்குப் பின்னால் தூக்கியெறிந்ததன் விளைவே இதுபோன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடக்கக் காரணம்.
3. நம்முடைய பெண்பிள்ளைகளை அந்நிய ஆடவர்களோடு பேசவோ பழகவோ கூடாது என்று எச்சரிக்கை செய்யத் தயங்குகின்றோம். அதன் விளைவே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு முக்கியக் காரணம்.
4. பொதுச்சொத்தைக் கையாளும்போது மிகுந்த கவனம் வேண்டும். அதில் சிறிதளவும் நம்முடைய பொருளோடு கலந்துவிடாமல் பேணிக்கொள்ள வேண்டும். அதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
5. மார்க்க அறிஞர்களை (ஆலிம்களை)க் குறைகூறுவதை அறவே விட்டொழிக்க வேண்டும். அவர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் இஸ்லாமியக் கருத்துகளை எடுத்துரைக்க ஆதரவு நல்க வேண்டும்.
நடந்துவிட்ட இந்த நிகழ்வு பலரின் உள்ளத்தில் சோக வடுக்களை உண்டாக்கியிருந்தாலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஒரு நிகழ்வுகூட நடக்காமல் நம் சமுதாயத்தைக் காப்பதே நம் தலையாய பணியாகக் கொள்ள வேண்டும். நம் சமுதாயத்தைக் காக்க நம்மால் இயன்ற அளவு முயற்சி செய்து, எதிரிகளின் சூழ்ச்சியை வெல்ல வல்லோன் அல்லாஹ் நல்லருள் புரிவானாக!
Labels:
அபகரித்தல்,
துறந்துவிட்டாள்,
படிப்பினைகள்
Subscribe to:
Posts (Atom)








