புதன், 27 மார்ச், 2024

எழுத்தாளரும் பேச்சாளரும்...


-------------------------------------

எங்கள் மத்ரஸாவில் இவ்வாண்டு சிறப்பு மலர் ஒன்று வெளியிட உள்ளோம். அதற்கு உங்கள் கட்டுரை ஒன்று வேண்டும் என்று கேட்டனர். சில நாள்கள் குறிப்பெடுத்து பல மணி நேரங்கள் செலவழித்து, அந்தக் கட்டுரையை எழுதி முடித்து, அதைத் தட்டச்சு செய்து, மின்னஞ்சலில் அனுப்பி வைத்தோம்.

பிறகு அந்த மத்ரஸாவின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்புப் பேச்சாளர்கள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள்  உரையாற்றினார்கள். இடையில் அந்தச் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. அந்த மலர் குறித்துப் புகழ்ந்து பேசப்பட்டது. விழா முடிந்தது. பேச்சாளர்களுக்கு உரிய முறையில் அன்பளிப்புத் தொகைகள் வழங்கப்பட்டன. எல்லோரும் சென்றுவிட்டார்கள்.

அந்தச் சிறப்பு மலரில் கட்டுரை எழுதிய நாற்பது எழுத்தாளர்களை அந்த மத்ரஸாவின் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அவர்களுள் நானும் ஒருவன்.

பின்குறிப்பு: மிக அரிதாகச் சில மத்ரஸாக்கள் எழுத்தாளர்களுக்கு அன்பளிப்புத் தொகை வழங்குவதுண்டு.

அன்புடன்

நூ. அப்துல் ஹாதி பாகவி

27 03 2024

===========


கருத்துகள் இல்லை: