திங்கள், 1 மே, 2017

திருக்குர்ஆனை மட்டுமல்ல திருக்குறளையும்...

பாக்கியாத் அரபுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு ஓதிய காலத்தில் ஆசிரியப் பெருந்தகை மௌலவி ஸதக்கத்துல்லாஹ் பாகவி அவர்களிடம் திருக்குர்ஆன் தர்ஜமா வகுப்பு. அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் குறித்த பாடத்தில் தமிழ் இலக்கணங்களையும் தமிழாக்கம் செய்யும் முறைகளையும் விளக்குவார்கள். அடைப்புக் குறிக்குள் வார்த்தைகளை இட்டாலும் படிக்கும்போது எந்த நெருடலும் ஏற்படக் கூடாது. அந்த வகையில் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று சொல்லித் தந்தார்கள். அத்தோடு திருக்குறளையும் எங்களுக்குச் சொல்லித் தந்துள்ளார்கள்.
அவற்றுள் ஒன்று:

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

முகர்ந்து பார்த்தாலே அனிச்சம் மலர் வாடிப்போய்விடும். அதுபோலவே  விருந்து கொடுப்பவர் விருந்தாளியைப் புன்னகையோடு பார்க்காமல் ஒருவிதமாகப் பார்த்தாலே அவர் மனம் வாடிவிடும். அவர் ஒழுங்காக உண்ணமாட்டார்.

பாக்கியாத் ஆசிரியர்கள் யாரும் உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று பிரித்துப் பார்க்காமல் கல்வி என்ற அடிப்படையில் எல்லாவற்றையும் சேர்த்தே சொல்லிக்கொடுத்தார்கள். அவர்களிடம் நாங்கள் திருக்குர்ஆனை மட்டும் படிக்கவில்லை. திருக்குறளையும் சேர்த்தேதான் படித்தோம்.

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி 

கருத்துகள் இல்லை: