வியாழன், 10 மார்ச், 2011

ஒன்றிணைக்கும் முயற்சி

பிரிந்து கிடக்கின்ற முஸ்லிம் லீக் கட்சியை ஒன்றிணைக்கும் கவலை சமுதாய அக்கறையுள்ள ஆலிம்களுக்கே இருக்க முடியும். எனவே தமிழ்நாடு உலமா சபையிலுள்ள ஆலிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றி, `முஸ்லிம் லீக்கை' ஒன்றிணைக்கும் நாளை எப்போது வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுப்போம்.

தமிழ்நாட்டிலுள்ள ஆலிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று நம்மைப் பின்பற்றித் தொழும் முஸ்லிம்களை ஒன்றிணைப்போம். முதலில் முஸ்லிக் லீக் கட்சியை ஒரே கொடியின் கீழ் கொண்டுவந்து, பின்னர் முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டுவரப் பாடுபடுவோம்.

சட்டப்பேரவைத் தேர்தல் நாளுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. அதற்குள் நாம் நினைத்தால் என்னென்னவோ செய்ய முடியும். சமுதாய அக்கறையுள்ள உள்ளங்கள் வெகுண்டெழுந்தால் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். இன்ஷா அல்லாஹ் மாற்றம் விரைவில் ஏற்படலாம். விரைந்து வாருங்கள்! முடிவு செய்வோம்!

கருத்துகள் இல்லை: