புதன், 30 அக்டோபர், 2013

ஃபார்சீ படிக்க ஆசையா?

கண்ணியத்திற்கும் பெருமதிப்பிற்குமுரிய மௌலானா மௌலவி பி.எஸ்.பி. ஸைனுல் ஆபிதீன் பாகவி ஹள்ரத் அவர்கள் மண்ணடி, சாலை விநாயகர் சாலையில் அமைந்துள்ள லஜ்னத்துல் முஹ்சினீன் ட்ரஸ்ட் பள்ளிவாசலில் நவம்பர்-2013 முதல், மரணத் தறுவாயில் உள்ள ஃபார்சி மொழிக்கு உயிரூட்டும் விதமாக சென்னையிலுள்ள ஆலிம்களுக்கு அம்மொழியைப் போதிக்க முன்வந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் ஆன்மிகத்தில் பின்தங்கியுள்ள ஆலிம்கள் தம் உள்ளத்தின் நோய்களைப் பற்றித் தெரிந்து கொண்டு அதற்கேற்பத் தம் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்காகவும் இஹ்யாவுல் உலூமித்தீன் எனும் நூலின் ஒரு பகுதியான அஜாயிபுல் கல்ப் (உள்ளத்தின் இரகசியங்கள்) எனும் பாடத்தையும் நடத்தவுள்ளார்கள்.

எனவே இப்பொன்னான வாய்ப்பைச் சென்னையிலுள்ள ஆலிம்கள் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, லஜ்னத்துல் முஹ்சினீன் பள்ளிவாசலில் மௌலவி ஃபக்ருத்தீன் பாஸில் பாகவி (8189883733) அவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி


செவ்வாய், 29 அக்டோபர், 2013

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சனி, 12 அக்டோபர், 2013

செவ்வாய், 8 அக்டோபர், 2013

இக்லாஸ் பைத்துல் மால் ட்ரஸ்ட்



தலைப்பு: திருக்குர்ஆன் விளக்க உரை
 (உள்ளடக்கம்: கடன் பெறுதல், கடனைத் திருப்பி ஒப்படைத்தல், பைத்துல் மால் நிர்வாகிகளின் பொறுப்பு உள்ளிட்டவை)

இடம்: செரியன் நகர், சென்னை-81
நாள்: 06 10 2013



சனி, 28 செப்டம்பர், 2013

சனி, 24 ஆகஸ்ட், 2013

93 wazzhuhaa

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

இறைவழி மருத்துவம்



வழங்குபவர்

டாக்டர் ஆர். கனக சபாபதி

உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு நோய் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் அதைக் கொடுப்பதும் அதை எடுப்பதும் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. அதை விட்டுவிட்டு, ஒரு நோய் வந்துவிட்டால் மனிதன் சூட்டியுள்ள பெயரைக் கேட்டே பயந்துபோய் அந்நோய் தீராது என்று தன் மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொள்கிறான். அதனால்தான் அவனுடைய நோய் தீருவதே இல்லை. சர்க்கரை நோய், இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, புற்றுநோய் உள்ளிட்ட எத்தனையோ நோய்கள் தீராத நோய்களாக இருக்கக் காரணம் மனிதனின் எண்ணமே. எனவே எந்நோய் வந்தாலும், இது குணமளிக்கப்படக்கூடியதுதான் என்றே எண்ண வேண்டும். மாறாக, இது தீராத நோய் என்று எண்ணினால் அவனுடைய எண்ணப்படியே அது நடைபெறும்.

எண்ணம்போல் வாழ்வு என்று தமிழ்மொழி கூறுகிறது. செயல்கள் யாவும் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டவையே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே நம் எண்ணத்தை உயர்ந்த எண்ணமாக ஆக்கிக்கொள்வோம்.  அல்லாஹ்வின் அருளால் ஆரோக்கியமாக வாழ்வோம்.

இறைவழி மருத்துவம்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

இனிய திசைகள் மாத இதழ் ஆகஸ்ட் 2013

இனிய திசைகள் மாத இதழ் ஆகஸ்ட் 2013