வியாழன், 2 மே, 2024

வஃபாத் அறிவிப்பு

 நேற்றுதான் (01.05.2024) என்னிடம் செல்பேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். துபையிலிருந்து தாம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

அந்தோ,
சில வாரங்களுக்கு முன்புதான் அவர்களின் மனைவி துபையில் வஃபாத் ஆனார். அதன்பின் தாம் தனியாக வந்து சேர்ந்ததாகத் தெரிவித்தார்கள்.
இதோ இன்று (02.05.2024) அவரை அல்லாஹ் தன்பால் அழைத்துக் கொண்டான்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அவருடைய பாவங்களை மன்னித்து ஏக இறைவன் அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தில் இடமளிப்பானாக.
அவரைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை உயர்ந்தோன் அல்லாஹ் வழங்குவானாக.
______
மூத்த ஆலிமும் பல்வேறு அரபிக் கல்லூரிகளில் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய மெளலவி டாக்டர் T. M. அப்துல் காதிர் அன்வரி ஃபாஜில் ஜமாலி ஹள்ரத் அவர்கள் நேற்று இரவு வஃபாத் ஆகிவிட்டார்கள்.
ஃபீ ஸபீல் எனும் மாத இதழை நடத்தியவர்.
பல்வேறு நூல்களை எழுதியவர்.
தற்போது திருக்குறளை அரபியில் கவிதை நடையிலும் உரை நடையிலும் எழுதிக் கொண்டிருந்தார். அரபு - தமிழ் அகராதியையும் எழுதிக் கொண்டிருந்தார்.
-----
ஜனாஸா வைக்கப்பட்டுள்ள இடம்:
127, ஹமீதா மன்ஜில்,
ECR பனையூர்,
சென்னை.
(பனையூரில் மெயின் ரோடு KSA CONSTRUCTION அலுவலகம் அருகில்)
வருத்தத்துடன்
நூ.அப்துல் ஹாதி பாகவி



கருத்துகள் இல்லை: