புதன், 20 செப்டம்பர், 2023

தினமணி விவாதமேடை (20 09 2023)


--------------------------------------------------

கடந்த வாரம் கேட்கப்பட்ட 'மாணவர்களின் கல்வியை திசைதிருப்புவதால் பள்ளிகளில் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று யுனெஸ்கோ அமைப்பு பரிந்துரைத்திருப்பது ஏற்புடையதா?" என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...


 இன்றைய நவீன உலகில் காட்சி ஊடகங்கள் மாணவர்களின் மிகுதியான நேரத்தைத் திருடிக்கொள்கின்றன.  அவற்றுள் முதலிடம் வகிப்பது அறிதிறன்பேசி (ஸ்மார்ட் ஃபோன்) ஆகும். அதில் விளையாட்டு, திரைப்படம், காணத்தகாத காட்சிகள் ஆகியவற்றில் மாணவ-மாணவிகள் பலர் தம் பொன்னான நேரத்தைப் பாழ்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்கள்தம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்வியில் கவனம் செலுத்தத் தவறிவிடுகின்றனர்.  எனவே மாணவர்கள்  அதைப் பயன்படுத்தாமல் இருப்பதே கல்வியில் முழுமையான கவனம் செலுத்த வழிவகுக்கும். 

நூ. அப்துல் ஹாதி பாகவி, 

பட்டினம்பாக்கம், 

சென்னை-28 

13.09.2023






கருத்துகள் இல்லை: