வியாழன், 19 ஏப்ரல், 2018

புகாரீ (ரஹ்) அவர்கள் எழுதிய ‘அதபுல் முஃப்ரத்’


------------------------------------------------------------------
புகாரீ (ரஹ்) அவர்கள் எழுதிய புகாரீ எனும் நூல் மட்டுமே பலருக்குத் தெரியும். ஆனால் அவர்கள் எழுதிய வேறு பல நூல்களும் உள்ளன. அவற்றுள் மிக முக்கியமான ஒன்று ‘அதபுல் முஃப்ரத்’ ஆகும்.

தம்முடைய நிபந்தனைக்கு உட்படாத, அதேநேரத்தில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அதில் தொகுத்துள்ளார்கள். ஒரு தனி மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய ஒழுக்கங்கள் குறித்த நபிமொழிகள்தாம் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் இந்நூல் ‘அதபுல் முஃப்ரத்-தனிமனித ஒழுக்கம்’-எனும் பெயர் பெறுகிறது.

இந்நூலை மொழிபெயர்த்த அப்துர் ரஹ்மான் மன்பஈ வாழ்த்துக்குரியவர். சாஜிதா பதிப்பகத்தின் உரிமையாளர் ஜனாப் முஹம்மது ஜகரிய்யா இந்நூலைப் பிழைதிருத்தம் செய்து தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழ் வார்த்தைகளையும் நடையையும் செம்மைப் படுத்தியுள்ளேன். அதுவே இந்நூலில் எனது பங்காகும்.

இந்நூலை வாங்கி வாசிக்கும் வாய்ப்பை அனைவரும் பெற வேண்டும் என்பதே என் அவா. அதற்காக நான் இறைவனிடம் துஆச் செய்கிறேன். 

பக்கங்கள்: 632
விலை: ரூ. 300/-
வெளியீடு: சாஜிதா பதிப்பகம், மண்ணடி, சென்னை-1
தொடர்புக்கு: 044 2522 4821

-முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.
(இமாம் மஸ்ஜித் ஜாமிஉல் அன்வார், மணலி, சென்னை-68.)






கருத்துகள் இல்லை: