புதன், 3 ஜூலை, 2024

விவாதமேடை (26. 06. 2024) தினமணி

 

________
#கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளுக்குக் காவல்துறை மற்றும் பிற அரசுத்துறைகளின் மெத்தனமே காரணம் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. ஏற்கெனவே #தினமணி ஆசிரியர் சொன்னதுபோல், கடந்த காலங்களில் மது விற்பனையைத் தனியார் செய்து வந்ததால், அதன் முதலாளிகள் அவ்வப்போது காவல்துறையைக் கவனித்துக்கொண்டனர். ஆனால் தற்போது அரசாங்கமே மது விற்பனை செய்வதால் #காவல்துறையைக் கவனிப்பார் இல்லை. எனவே அவர்கள் கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் முதலாளிகள் அவர்களைக் கவனித்துக்கொள்வார்கள். இதுதான் நிதர்சன உண்மை. கள்ளச் சாராய விற்பனை கள்ளக்குறிச்சியில் மட்டுமின்றிப் பல்வேறு ஊர்களிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டதால் இப்போது இந்த ஊர் ஊடகக் கண்ணுக்குத் தெரிகிறது. ஆக காவல்துறை நினைத்தால் கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருள்கள் விற்பனை, கள்ளக் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்தலாம்.

- நூ. அப்துல் ஹாதி பாகவி
பட்டினப்பாக்கம், சென்னை-28
====================




https://www.facebook.com/abdul.hadi.986227


கருத்துகள் இல்லை: