திங்கள், 17 ஏப்ரல், 2017

என்னுடைய உஸ்தாத் மௌலானா இல்யாஸ் பாகவி மறைவு!


வேலூர் ஜாமிஆ அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத்தின் நீண்ட நாள் பேராசிரியரும், சிறந்த மார்க்க அறிஞரும், திருப்பூர் மாவட்ட அரசு காஜியும், அபூதாவூத்-நபிமொழித் தொகுப்பின் மொழிபெயர்ப்பாளருமான மௌலானா ஹாஃபிழ் அப்ஸலுல் உலமா  முஹம்மது இல்யாஸ் பாகவி ஃபாஸில் தேவ்பந்தி திருப்பூரில் 05-04-2017 அன்று அதிகாலை 4-00 மணியளவில் வஃபாத்தானார் (இன்னா லில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜிவூன்).

அபூதாவூத் தொகுப்பை முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து பணிகளைச் செய்துவந்தார். இறையருளால் முதல் பாகத்தின் பணிகள்  முழுமையாக முடிந்து நூலும் வெளியாகிவிட்டது. இரண்டாம் பாகத்துக்கான மொழியாக்கத்தையும் முழுமையாக முடித்து அனுப்பிவிட்டார். மூன்றாம் பாகப் பணிகள் நடந்துகொண்டிருந்த வேளையில் அவருடைய மறைவு சமுதாயத்திற்கு மிகப் பெரிய இழப்பாகும்.


அன்னாரை இறைவன் தன்னுடைய நல்லடியார்கள் குழுவில் சேர்ப்பானாக. கருணையுள்ள ரஹ்மான் அன்னாரின் மார்க்கச் சேவைகளை ஏற்று ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர்க்கும் உறவினர்களுக்கும் மாணவர்களுக்கும் வல்ல இறைவன் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக. 


கருத்துகள் இல்லை: