சனி, 27 பிப்ரவரி, 2016

நேஷனல் ஓபன் ஸ்கூலிங்




நேஷனல் ஸ்கூலிங் எனும் விளம்பரத்தை, ஒரு பள்ளியில் இமாமாக உள்ள ஓர் ஆலிமிடம் காட்டி, நீங்க பத்தாம் வகுப்பு படிச்சிருக்கீங்க. இப்போது 12ஆம் வகுப்பு நேரடியாகப் படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. நீங்க பயன்படுத்திக்கொள்ளலாமே? என்று கேட்டேன். அதன்பிறகு அவர் கேட்ட கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை.

நீங்க என்ன படிச்சிருக்கீங்க? என்று கேட்டார். பிஎச்.டி. முடிச்சிருக்கேன். அல்ஹம்து லில்லாஹ் என்று சொன்னேன்.

நீங்கள் இமாமாக உள்ள பள்ளியில் உங்களுக்கு என்ன சம்பளம்? என்று கேட்க, நான் என் சம்பளத்தைச் சொல்ல, “எனக்கு அதைவிட ஈராயிரம் அதிகம்” என்றார்.

சரி, நீங்க, பிஎச்.டி. முடிச்சதாலே உங்கள் மஹல்லா சார்பாக என்னென்ன வசதிகள் செய்து கொடுத்திருக்காங்க? என்று கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அப்படின்னா, பத்தாம் வகுப்பு படிச்ச, எனக்கும் பிஎச்.டி. படிச்ச உங்களுக்கும் எந்த வித்தியாசத்தையும் இந்தச் சமுதாயம் காட்டாதபோது, எதற்காக நான் மேற்கொண்டு படிக்கணும்? என்று கேட்க, என்னால் பதில் சொல்ல முடியல.

நீங்களே பதில் சொல்லுங்க...

எந்த முத்தவல்லியாவது, நம் பள்ளி இமாம் என்னென்ன படித்திருக்கிறார், அவருக்கு என்னென்ன தகுதிகள் உள்ளன என்று பார்த்ததுண்டா? அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப சம்பளம் உண்டா? வீடு உள்ளிட்ட இன்னபிற வசதிகளைச் செய்து தந்ததுண்டா? எந்த முத்தவல்லியும் தம் பள்ளிக்கு இமாமாகச் சேர்க்கின்றவரின் டிகிரியை வாங்கிப் பார்த்ததில்லை. எனவேதான் நாற்பது நாள் தப்லீக் ஜமாஅத் சென்றவரெல்லாம் இமாமாகப் பணியாற்ற முடிகிறது. முத்தவல்லிகள் இமாமின் டிகிரிகளுக்கேற்பச் சம்பளம் வழங்கத் தயாராகிவிட்டால் ஒவ்வோர் இமாமும் தம் கல்வித்தகுதியை வளர்த்துக்கொள்ள முற்படுவார். அதனால் அவர்களின் கல்வித்தரமும் உயரும். அவர்களின் சம்பளமும் உயரும். சமுதாயத்திலும் அவர்களால் பெரும் மாற்றம் ஏற்படும்.

இது குறித்து, உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். உங்கள் கருத்துகள் பிறருக்குப் பயனுள்ளதாக இருக்கட்டும். சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.



கருத்துகள் இல்லை: