திங்கள், 24 ஆகஸ்ட், 2015

தூது வந்த வீரர்

எழுத்தாளரும் கவிஞருமான ஜனாப் ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்களை இன்று (24-08-2015) காலை சந்தித்து இஸ்லாமிய இல்லறம் எனும் நூலைக் கொடுத்தேன். பாராட்டினார்; வாழ்த்தினார்.

அவர் தமிழாக்கம் செய்த தூது வந்த வீரர் எனும் நூலை எனக்குப் பரிசளித்தார். தாமஸ் கார்லைல் எனும் வரலாற்று ஆசிரியர் 150 ஆண்டுகளுக்குமுன் இங்கிலாந்தில் ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கமே அந்நூல். தமிழாக்கம்  என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதில் பக்கத்திற்குப் பக்கம் அவரின் அயராத உழைப்பு தெரிகிறது. வாசிக்கும்போது அதனைப் புரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய நூலது. எனவே இதுவரை வாசிக்காதோர் யோசிக்காமல் அந்நூலை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள். மொழியாக்கம் என்ற எல்லையைத் தாண்டி ஓர் இலக்கிய நூலைத் தமிழில் வாசிக்கின்ற திருப்தி கிடைக்கும்.

நூலைப் பெற தொடர்புகொள்க: 9994405644

குறிப்பு: நான் எனது நூலை அன்பளிப்பாகத்தான் கொடுத்தேன். ஆனால் அவர் அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டார். பிறகு அவர் தமது நூலைத் தந்தபோது, பதிலுக்கு நான் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன். அவர் அதை வாங்க மறுத்து, துஆச் செய்யுங்கள் போதும் என்று கூறிவிட்டார். எனவே அவருடைய எழுத்துப் பணி புவியெங்கும் பரவிப் புகழ் பெறவும், அவர் ஈருலகிலும் அபரிமிதமான நன்மைகளை அடையவும் தூயோன் அல்லாஹ்விடம் இருகரமேந்துகின்றேன்.

 மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி, சென்னை-81


கருத்துகள் இல்லை: