சனி, 8 செப்டம்பர், 2012

தமிழக வரலாற்றில் முதன் முறையாக...



ஜமாஅத்துல் உலமா சபை தொடங்கப்பட்டு 62 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இதுவரை ஆலிம்கள் எதற்காகவும் ஒன்றிணைந்து வீதியில் களமிறங்கிப் போராடியதில்லை. ஆனால் இன்று (08.09.2012) அவர்கள் களமிறங்கி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள் என்றால் அது மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆம்! சென்னை-மீஞ்சூர் கவுண்டர் பாளையத்தில் இமாமாகப் பணியாற்றி வந்த அப்துர் ரவூப் நூரி என்பவரை முன்விரோதம் காரணமாக, அப்பள்ளியில் நிர்வாகத்திலுள்ள ஹயாத் பாஷா என்பவர் கூலிப்படையை ஏவிவிட்டு, அவர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். பத்து நாள்களுக்குப் பிறகுதான் காவல்துறை கொலையாளியைக் கைது செய்துள்ளது.  இன்னும் கூலிப்படையினர் கைது செய்யப்படவில்லை. அதை எதிர்த்தும், தாக்குதலுக்குள்ளானவருக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரியும்  தமிழக அரசின் கவனத்தை ஈர்க்குமுகமாக, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை மாநகர உலமாக்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை எதிரே உள்ள மெமோரியல் ஹால் முன்பாக காலை 9: 40 மணிக்குத் தொடங்கிய ஆர்ப்பாட்டம், காவல்துறை ஆணையரின் வேண்டுகோளுக்கிணங்க 10: 30 மணிக்கு முடித்துக்கொள்ளப்பட்டது. அதில் சென்னை மாநகர ஆலிம்களைத் தவிர முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். அதில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் முழக்கங்களையும் காணொளியில் காணலாம்.











செய்தி: மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி