சனி, 27 டிசம்பர், 2008

அல்லாஹ்வும் அடிமையும்






பங்களா தந்தாய்

கார் ஒன்று வேண்டுமென்றான்.


ஓலைக் குடிசையில் வாழும்

ஏழையைப் பார்-என்றான்.


குழந்தைகளைத் தந்தாய்

செல்வத்தைத் தா-என்றான்.


குழந்தையே இல்லாத

மலடியைப் பார்-என்றான்.


கையைச் சீராகப் படைத்தவனே

கைக்கடிகாரம் வேண்டுமென்றான்.


கையே இல்லாமல் வாழும்

முடவனைப் பார்-என்றான்.


காலை நன்றாகப் படைத்தவனே

காலணியைத் தா-என்றான்.


காலே இல்லாத

நொண்டியைப் பார்-என்றான்.


கண்ணைச் சிறப்பாய் அமைத்தவனே

கண்ணாடி வேண்டுமென்றான்.


கண் பார்வையற்ற

குருடனைப் பார்-என்றான்.


கருப்பாய் எனைப் படைத்தவனே

சிவப்பாய் எனை ஆக்கு-என்றான்.


குறையைப் பார்க்காதே

நிறையைப் பார்- என்றான்.


மேலும் சொன்னான்-நான்

உந்தன் உடலைப் பார்ப்பதில்லை

உள்ளத்தை தான் பார்க்கிறேன்-என்றான்.


(இக்கவிதை 01-15 ஆகஸ்டு 2001 சமரசம் இதழில் வெளிவந்துள்ளது.)






கருத்துகள் இல்லை: